பெற்ற குழந்தைக்கு உள்ள அத்தனை உரிமையும் தத்து குழந்தைக்கும் உண்டு.. கர்நாடகா ஹைகோர்ட் அதிரடி!
பெங்களூர்: பெற்ற குழந்தைக்கு உள்ள அத்தனை உரிமையும் தத்து குழந்தைகளுக்கும் உண்டு என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் நீதித்துறை ஊழியரான வினாயக் முட்டாட்டி என்பவர் 2011-ம் ஆண்டு மகனை தத்தெடுத்திருக்கிறார். 2018-ம் ஆண்டு முட்டாட்டி மரணம் அடைந்துவிட்டார். அதே ஆண்டு, தத்தெடுக்கப்பட்ட மகன் கிரீஷ், கருணை அடிப்படையில் அரசு பணியை பெற விண்ணப்பித்தார். ஆனால் தத்து குழந்தை என்பதால் அவருக்கு அரசு பணி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கிரீஷ் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2021-ம் ஆண்டு கிரீஷின் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கருணை அடிப்படையில் அரசு பணி பெற சட்டவிதிகள் இல்லை என கூறி கிரீஷ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து கிரீஷ், டிவிஷன் பெஞ்ச்சில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே கடந்த ஆண்டு தத்து குழந்தை- பெற்ற குழந்தை இடையேயான வேறுபாட்டை ஏற்படுத்தும் சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டன. இதனை நீதிமன்றத்தின் கவனதுக்கு கிரீஷ் கொண்டு சென்றார்.
இதையடுத்து பெற்றோருக்கு இயற்கையாக பிறந்த குழந்தைக்கு உள்ள அத்தனை உரிமையும் தத்து குழந்தைக்கும் உண்டு என கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்றும் அதிரடியாக உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications