ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி.. நிறைவு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கிறார்
பெங்களூரு: ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி, பெங்களூரில் எலஹங்கா விமானப்படை தளத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றைய விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்
ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சியான ஏரோ இந்தியா கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 3ம் தேதி தொடங்கி வைத்தார்.

பெங்களூரில் உளள் எலஹங்கா விமானப்படை தளத்தில் இந்த கண்காட்சி நடந்து வருகிறது. நிறைவு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.
முதல் நாளில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை புகையை கக்கியபடி, வானில் அணிவகுத்து பறந்து சென்று பார்வையாளர்களை பரவசப்படுத்தின. இரண்டாவது நாளில் பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யாவும் கலந்து கொண்டார். அவர் எல்.சி.ஏ. வகை தேஜஸ் விமானம் ஒன்றை ஓட்டினார். இந்தியாவுக்கான பெங்களூருவின் பரிசு தேஜஸ் விமானம் என்று அவர் நெகிழ்ந்தார்.
இதனிடையே சீனா எல்லை மீறினால் இந்தியா அஞ்சாது என்றும், பதிலடி கொடுக்கும் என்றும் ஐ.ஏ.எஃப் தலைவர் ஆர்.கே.எஸ் பாதௌரியா விமான படை கண்காட்சியின் போது கூறினார்.












Click it and Unblock the Notifications