குட்நியூஸ்.. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு.. எவ்வளவு கனஅடி தெரியுமா?
பெங்களூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அங்கு தற்போது பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் வரும் நாட்களில் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு என்பது இன்னும் அதிகரிக்கும் என எதிர்க்கப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை போல் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இந்நிலையில் தான் கடந்த 2 நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதனால் கேஆர்எஸ் எனும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு அதிகளவில் நீர்வரத்து வருகிறது. இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தான் காவிரி ஆறு மூலம் தமிழகத்துக்கு வரும்.
தற்போதைய சூழலில் மண்டியா மாவட்டத்தில் உள்ள 124.80 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் என்பது 100 அடியை நெருங்கி உள்ளது. அணைக்கு 44 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரியில் 2,688 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது
அதேபோல் கபினி அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடல் மட்ட அளவில் இருந்து 2,284 அடி கொள்ளவு கொண்ட கபினி அணை முழுவதுமாக நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கான நீர்வரத்து என்பது 25 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால் விரைவில் கபினி அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.
மேலும் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் 12 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 17,688 கனஅடி நீர் பாய்ந்து வருகிறது.
மேலும் குடகு, கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கலாம். இது நடக்கும் பட்சத்தில் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவும் தொடர்ந்து கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications