Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்நியூஸ்.. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு.. எவ்வளவு கனஅடி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அங்கு தற்போது பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் வரும் நாட்களில் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு என்பது இன்னும் அதிகரிக்கும் என எதிர்க்கப்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை போல் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இந்நிலையில் தான் கடந்த 2 நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

After the heavy rain Karnataka releases water into cauvery from Kabini and KRS dam Increased upto 17,668 cuses

இதனால் கேஆர்எஸ் எனும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு அதிகளவில் நீர்வரத்து வருகிறது. இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தான் காவிரி ஆறு மூலம் தமிழகத்துக்கு வரும்.

தற்போதைய சூழலில் மண்டியா மாவட்டத்தில் உள்ள 124.80 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் என்பது 100 அடியை நெருங்கி உள்ளது. அணைக்கு 44 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரியில் 2,688 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது

அதேபோல் கபினி அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடல் மட்ட அளவில் இருந்து 2,284 அடி கொள்ளவு கொண்ட கபினி அணை முழுவதுமாக நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே பாக்கி உள்ளது. அணைக்கான நீர்வரத்து என்பது 25 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால் விரைவில் கபினி அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது.

மேலும் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் 12 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 17,688 கனஅடி நீர் பாய்ந்து வருகிறது.

மேலும் குடகு, கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கலாம். இது நடக்கும் பட்சத்தில் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவும் தொடர்ந்து கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+