குடிக்கவே நீர் இல்லை.. ஆனால் ‛ஷவர் பார்ட்டிக்கு’ ரெடியான பெங்களூர் ஸ்டார் ஓட்டல்கள் - ரெசார்ட்டுகள்!
பெங்களூர்: பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், பிரபல ஸ்டார் ஓட்டல்கள் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏராளமான அளவு தண்ணீரை வீணடிக்க தயாராகி வருகின்றன. இது தொடர்பான விளம்பரங்கள் பெங்களூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் டெக் நகரமான பெங்களூர் தற்போது தண்ணீரின்றி தவித்து வருகிறது. ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியால் தத்தளிக்கின்றன, அவற்றில் 219 மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக இதுபோன்ற வறட்சி காலங்களில் தனியார் டேங்கர் லாரிகளை மக்கள் நாடுவார்கள். ஆனால் இந்த முறை தனியார் டேங்கர் உரிமையாளர்களே தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பெங்களூரில் 14,000 ஆழ்துளை கிணறுகளிலிருந்து, 4000 டேங்கர் லாரிகள் தண்ணீரை எடுத்து சப்ளை செய்கின்றன. ஆனால் இந்தமுறை சுமார் 7000 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. எனவே மொத்த தண்ணீர் விநியோகத்தில் 50 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரி தண்ணீரின் விலையும் உயர்ந்திருக்கிறது. வழக்கமாக ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.500-600 வரை விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ.2000ஆக இது உயர்ந்திருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை சரி செய்ய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. நிலைமை இப்படி இருக்கையில் வரும் 25ம் தேதி ஹோலி கொண்டாட்டத்திற்கு தண்ணீரை அதிக அளவு வீணடிக்க பெங்களூரின் பிரபல ஸ்டார் ஓட்டல்களும், ரிசார்ட்களும் திட்டமிட்டு வருகின்றன. அதாவது, ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக ஷவர் விளையாட்டுக்களுக்கும், நீச்சல் குளத்தில் நேரத்தை கழிக்கவும் அழைப்பு விடுத்து விளம்பரங்களை செய்து வருகின்றன.
அலோஃப்ட் ஓட்டலால் நடத்தப்படும் பார்ட்டியில் அன்லிமிடெட் ஷவர் நடனங்களை கொண்டாடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்க குழந்தைகளுக்க ரூ.49 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பெரியவர்களை பொறுத்த அளவில் 8 பேர் கொண்ட குழுவுக்கு ரூ.2600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல பிரபல ராதா ஹோம்டெல் எனும் ஓட்டலும், ஹோலி பண்டிகை கொண்டாட்டம் குறித்து விளம்பரங்களை கொடுத்திருக்கிறது. அதில், "ஹோலியை வண்ணப்பொடிகளுடனும், ஷவர் மழை நடனங்களுடனும் கொண்டாடுங்கள்" என அழைப்பு விடுத்திருக்கிறது. இதில் பங்கேற்க சிறார்களுக்கு ரூ.99 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 10 பேர் கொண்ட குழு ரூ.2999 கொடுத்து இதில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூரின் பெரிய பெரிய ரிசார்ட்டுகளிலும், ஓட்டல்களிலும் இதுபோன்ற பார்ட்டிகள் நடத்தப்படுவது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. குடிநீரில் காரை கழுவினால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என பெங்களூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால், மறுபுறம் இதுபோன்ற தண்ணீரை வீணடிக்கும் பார்ட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து பெங்களூர் மக்கள் விமர்சனங்களை அடுக்க தொடங்கியுள்ளனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications