வன்னியர்கள் ஒன்றுபட்டால்... ஆட்சியை பிடிக்கமுடியும் -அன்புமணி ராமதாஸ்
Recommended Video
பெங்களூரு: வன்னியர்கள் ஒன்றுபட்டால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என பாமக இளைஞரணித் தலைவரும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற வன்னியர் குல சத்திரிய சேவை சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்தக் கருத்தை கூறினார்.
மேலும், வன்னியர்கள் வரலாறு தொடர்பான அக்கினி என்ற நூலை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பிரதிகளிலும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெளியிட அதனை அன்புமணி பெற்றுக்கொண்டார்.

அன்புமணி பேச்சு
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை இப்போது அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், அன்புமணி ஆட்சியை பிடிப்பது பற்றி பேசியிருப்பது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் பேச்சின் மூலம் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவதே பாமகவின் இலக்கு என்பது உணர முடிகிறது.

பெங்களூருவில் விழா
வன்னியர் குல சத்திரிய சேவை சங்கத்துகான புதிய இணையதளம் தொடங்குதல் மற்றும் புத்தகங்கள் வெளியிடுவதற்காக பெங்களூருவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், பாமக எம்.பி.அன்புமணியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அன்புமணி அழைப்பு
அந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், கர்நாடகத்தில் வன்னியர் சமுதாயத்தினர் 60 லட்சம் பேர் உள்ளதாகவும், வன்னியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் பேசினார். மேலும், கர்நாடகாவில் வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் எம்.பி., எம்.எல்.ஏ., போன்ற பதவிகளுக்கு வர முடியும் எனத் தெரிவித்தார்.

ஒன்றுபட்டால் ஆட்சி
தமிழகத்தில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலும் கூட இன்னும் முதலமைச்சர் ஆக முடியவில்லை என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் முதலமைச்சராக ஆகிவிட்டார் எனவும் கூறினார். மேலும், வன்னியர்கள் ஒன்றுபட்டால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என அன்புமணி கூறினார்.

அதிமுக அதிர்ச்சி
அன்புமணி ராமதாஸின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை பாமக தொடரும் எனக் கூறப்படும் நிலையில் அன்புமணி ஆட்சியை பிடிப்பது பற்றி பேசியிருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications