பெங்களூர் டிராபிக்கை குறைக்க எங்க ஆபீஸ் ரோட்டை தர முடியாது.. சித்தராமையாவிற்கு விப்ரோ நிறுவனர் பதில்
பெங்களூர்: பெங்களூர் அவுட்டர் ரிங் ரோடு (ORR) பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க விப்ரோ (Wipro Campus) கேம்பஸின் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் கோரிக்கையை, விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜி நிராகரித்துள்ளார்.
"சர்ஜாபூர் கேம்பஸ் தனியார் சொத்து; அது சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) கீழ் செயல்படும் இடம் என்பதால், சட்ட ரீதியாகவும், ஒப்பந்த ரீதியாகவும், பொதுமக்கள் நுழைய அனுமதி அளிப்பது சாத்தியமில்லை," என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விப்ரோ இடத்தின் வழியே வாகனங்கள் செல்வதால் பிரச்சனைக்கு நீடித்த தீர்வு கிடைக்காது என்றும், அரசு மற்றும் நிபுணர்களுடன் இணைந்து அறிவியல், தரவுத்தள அடிப்படையிலான முழுமையான போக்குவரத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
அதேநேரம் முதல்வர் கேட்ட பிறகும் இல்லை என முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிட முடியாது அல்லவா. எனவே, விப்ரோ நிறுவனம், இந்த ஆய்வுக்கான செலவில் ஒரு முக்கியமான பங்கை ஏற்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார் அசீம் பிரேம்ஜி. நகரின் போக்குவரத்து சிக்கல்களுக்கு பேக்கேஜ் தீர்வுகள் உருவாக்க வேண்டும் என்றும் பிரேம்ஜி வலியுறுத்தியுள்ளார்.
"பெங்களூரு ORR பகுதி, இந்தியாவின் ஏற்றுமதி மையமாகவும், உலகத் தரத்திலான ஐடி சேவைகள் வழங்கும் மையமாகவும் விளங்குகிறது. எனவே போக்குவரத்து பிரச்சனைக்கு ஒரே தீர்வு கிடையாது; பல்வேறு கோணங்களில் அணுகும் பொழுதே நிலையான முடிவுகள் கிடைக்கும்," என்று அவர் அறிவுரை தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications