பஜ்ரங் தள நிர்வாகி கொலை.. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு.. பதற்றத்தில் கர்நாடகா!
பெங்களூர்: பஜ்ரங தள நிர்வாகி கொலையை கண்டித்து நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு நிறைய வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த நிர்வாகி ஹர்ஷாவை(26) 4 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு கொலை செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
சீகேஹட்டி என்ற பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஷிமோகாவில் வன்முறை வெடித்ததால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு
அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக சிமோகா மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த ஷிமோகாவில் நடந்த வன்முறையில் போராட்டக்காரர்கள் கற்களை வீசியும், வாகனங்களுக்கு தீவைத்துக் கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசினர்.

முதல்வர் பொம்மை
இந்த வன்முறை குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். பஜ்ரங் தள நிர்வாகி கொலையில் தொடர்புடையவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். அது போல் கர்நாடகா உள்துறை அமைச்சர் அராக ஞானேந்திரா கூறுகையில் ஹிஜாப் விவகாரத்துக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசாரணை அறிக்கை வந்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றார்.

காங்கிரஸை குற்றம்சாட்டிய பாஜக
கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா கூறுகையில் பஜ்ரங் தள நிர்வாகி கொலையில் முஸ்லீம் குண்டர்கள் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும் முஸ்லீம் குண்டர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் தூண்டிவிடுகிறார் என்றார். இதை சிவக்குமார் மறுத்துள்ளார். அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப் பதிவு செய்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

கூடுதல் போலீஸார்
அவர் தேசத்திற்கும் தேசியக் கொடிக்கும் அவமானத்தை கொடுத்துவிட்டார் என காங்கிரஸ் சிவக்குமார் குற்றம்சாட்டினார். பஜ்ரங் தள நிர்வாகி கொலை தொடர்பாக ஷிமோகா பகுதியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். உள்ளூர் போலீஸாருக்கு உதவி செய்ய 212 இன்ஸ்பெக்டர்களும் , சப் இன்ஸ்பெக்டர்களும் ஷிமோகா விரைந்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications