காங்கிரஸ் அரசின் கைகளில் ரத்தம் படிந்துவிட்டது.. பெங்களூர் கூட்ட நெரிசல் பலி பற்றி பாஜக விளாசல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்த ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் "பொறுப்பற்ற" மற்றும் "மோசமான திட்டமிடல் மற்றும் கூட்ட நெரிசல் நிர்வாகமே" காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸை சாடிய பாஜக

பாஜக கர்நாடக பிரிவு எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில், "காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற செயலால் நெரிசலில் சிக்கி ரசிகர்கள் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எங்கும் குழப்பம் நிலவியது. அதேநேரம், துணை முதல்வர் டிகே சிவகுமார், ஆர்சிபி வீரர்களை கட்டிப்பிடித்து ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தார். காங்கிரஸ் அரசின் கைகளில் ரத்தம் ஒட்டிக்கொண்டுள்ளது" என்று தெரிவித்தது.

பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியாவும் எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். "பெங்களூருவில் ஏற்பட்ட துயரமான நெரிசல். ஒரு கொண்டாட்டம் பேரழிவாக மாறிவிட்டது. கர்நாடக மாநில அரசு ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றியை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், மோசமான திட்டமிடல் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக நெரிசல் ஏற்பட்டது" என்று அவர் கூறினார்.

மேலும், "இந்த இதயத்தை நொறுக்கும் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். மாநில அரசின் மோசமான நிர்வாக தொலைநோக்கு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதால் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம் என்பதை கண்டறிய வேண்டும். கவனக்குறைவால் உயிர்கள் பறிபோயுள்ளன" என்றும் மாளவியா தெரிவித்தார்.

குமாரசாமி கண்டனம்

மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமியும் கர்நாடக காங்கிரஸ் அரசை சாடினார். "இந்த பெரிய சோகத்திற்கு முக்கிய காரணம் முறையான திட்டமிடல் இல்லாததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதும்தான். காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு இந்த பேரழிவிற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

கர்நாடக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 2025 ஐபிஎல் தொடரில் வென்றதன் வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்டது. விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்களுக்கு பெங்களூருவின் தெருக்களில் ஆர்சிபி சாம்பியன் அணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அணியை பாராட்டியபோது நெரிசல் ஏற்பட்டது.

இந்த துயர சம்பவம், சரியான திட்டமிடல் மற்றும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவாக ஏற்பட்டிருக்கிறது. மாநில அரசு இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+