பெங்களூர் ஹைவேஸில்.. காருக்குள் எட்டிப்பார்த்த போலீஸ்காரர்.. உறைஞ்சி நின்னுட்டாரு.. உள்ளே அந்த ஜோடி
பெங்களூரு: தன்னை கார் ஏற்றி கொல்ல பார்த்ததாக, போலீஸ்காரர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கர்நாடகாவில் ஏற்படுத்தி வருகிறது.
பெங்களுரில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் மகேஷ்.. கடந்த 4 வருடங்களாக போலீசாக பணியிலிருந்து வருகிறார்.. இவர் கடந்த ஜனவரி 20-ம் தேதி, மாலை 4 மணிக்கு சப்கார் லே அவுட் 3வது மெயின் ரோட்டில், வாக்கிங் சென்று கொண்டிருந்தார். வாக்கிங் போவதால், யூனிபார்மில் செல்லாமல் மஃப்ட்டியில் சென்றிருக்கிறார்..
வெள்ளை கார்: அப்போது, ரோட்டோரம் தூரத்தில் ஒரு வெள்ளை கார் நின்றிருந்தது.. அந்த கார் அசைந்தும், ஆடிக்கொண்டுமிருந்தது.. ஆனால், தூரத்தில் நின்று பார்த்தால், காருக்குள் யாரும் இருப்பது போல தெரியவில்லை.

எனினும், காருக்குள் யாரோ இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட மகேஷ், அந்த காரில் நடப்பதை, தூரமாக நின்றபடி கவனித்து கொண்டிருந்தார்.. பிறகு, மெல்ல அந்த காருக்குள் எட்டி பார்த்தார். முன்சீட்டில் யாரும் இல்லை என்றதால் பின்பக்க ஜன்னலை தட்டியிருக்கிறார்.. அப்போது காரில், ஒரு இளம்ஜோடி அரைகுறை டிரஸ்ஸில் இருந்தனர்.. அந்த காரின் பின்சீட்டில் இருவரும் பாலுறவில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.
மதிய நேரம்: இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், பப்ளிக்கில், அதுவும் மதிய நேரத்தில், பொதுமக்கள் ஏராளமானோர் நடமாடும் இடத்தில், இப்படித்தான் நடந்து கொள்வதா? பக்கத்தில் பார்க் இருக்கிறது.. அங்கே குழந்தைகள், உட்பட பலரும் இருக்கிறார்கள். பூங்கா அருகே இப்படி செய்யக்கூடாது என்று மகேஷ் அவர்களை கண்டித்திருக்கிறார்..
அதற்குள், காருக்குள் இருந்த அந்த இளைர, ஆடைகளை சரிசெய்துகொண்டு, டிரைவர் சீட்டில் வந்து உட்கார்ந்தார்.. உடனே மகேஷ், அந்த காரை போட்டோ எடுப்பதற்காக தன்னுடைய செல்போனை வெளியே எடுத்துள்ளார். இதைப்பார்த்ததும் டென்ஷன் அடைந்த இளைஞர், வேகமாக காரை எடுத்து, காரின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த மகேஷ் மீது மோதுவதற்காக போனார்..
கார் பானட் : தன் மீது கார் ஏற்ற வருவதை பார்த்ததுமே, மகேஷ் சுதாரித்துகொண்டு, காரின் பானட்டில் மீது தாவி ஏறிகொண்டார்.. காரை உடனே நிறுத்தும்படியும் பதறினார்.. ஆனால், அந்த இளைஞர், ரிவர்ஸ் கியரை இழுத்து, டக்கென பிரேக் போட்டார்.. பிரேக் போடும் முன்பு காரை 250-300 மீட்டர் தூரத்துக்கு ஓட்டிவந்ததாக சொல்கிறார்கள்.. இதில் மகேஷ் நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டார்..
அதற்குள் அந்த இளைஞர், காரை வேகமாக ஓட்டிக்கொண்டு, தப்பி சென்றுவிட்டார். ஆனால், மகேஷ் ஒரு போலீஸ்காரர் என்பது அந்த இளைஞருக்கு தெரியாது. காரில் இருந்து கீழே விழுந்ததில், மகேஷூக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார்.. அவரது கை, கால்கள், முதுகு உட்பட பல இடங்களிலும், காயங்கள் ஏற்பட்டன..
போலீஸார்: பொதுவெளியில், சாலையோரம் திடீரென எஸ்.ஐ. மகேஷ் கீழே விழுவதை பார்த்ததுமே, அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டது. பிறகு, தன்னை கார் ஏற்றி கொல்லப்பார்த்ததாக, நடந்த சம்பவம் குறித்து ஞானபாரதி போலீசல் மகேஷ் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.. மேலும், பூங்கா பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், அங்கிருக்கும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்..
கேமரா: அதில், மேற்கண்ட அத்தனை விஷயமும், பதிவாகியிருந்தது... இப்போது, அந்த கார் யாருடையது என்று தெரியவில்லை.. ஆனால், காரின் நம்பர், கேமராவில் பதிவாகி உள்ளதால், அதை வைத்து குற்றவாளிகளை தேடி கொண்டிருக்கிறார்கள்.. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, பெங்களூர் போலீசார் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications