தேனியில் சிக்கிய இம்ரான் கான்.. 38 இலங்கை மக்களை தமிழகம் வழியாக கர்நாடகா கடத்தியது அம்பலம் - என்ஐஏ
பெங்களூர்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முகமது இம்ரான் கான் குறித்து பெங்களூர் என்ஐஏ ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அவர் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஒரு நபருடன் சேர்ந்து இலங்கையில் இருந்து 38 பேரை தமிழகம் வழியாக கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முகமது இம்ரான் கான். இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆள்கடத்தல் தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இவரை என்ஐஏ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டில் அவர் திடீரென்று மாயமானார். இந்நிலையில் தான் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
முதலில் அவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்த்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் இளைஞர்கைள மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும், இலங்கை வழியாக இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வந்ததாகவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில் கைதான முகமது இம்ரான் கான் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கர்நாடகா மாநிலம் மங்களூரில் இலங்கையை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வசித்து வந்தனர். இதுதொடர்பாக மங்களூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் எப்படி இந்தியாவுக்கு வந்தனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இம்ரான் கான் என்பவர் தான் உதவியது தெரியவந்தது. இதையடுத்து முகமது இம்ரான் கானை என்ஐஏவின் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு பிடிக்க முயன்றது.
இதுபற்றி அறிந்த முகமது இம்ரான் கான் தலைமைறைவானர். 2021 முதல் அவர் மாயமானார். இதையடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் தான் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அவரை நேற்று கைது செய்தனர். தற்போதைய விசாரணையின்படி 38 பேரை அவர் இலங்கையில் இருந்து கள்ளப்படகில் ராமநாதபுரம் வரவழைத்து அங்கிருந்து கர்நாடகாவின் பெங்களூர் வழியாக மங்களூருவுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுபற்றி என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது.
அதில், ‛‛இம்ரான் கான் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஈசன் என்ற இலங்கை நாட்டை சேர்ந்தவருடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். இலங்கையை சேர்ந்த 38 பேரை அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகவும், வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் கூறி ஏமாற்றி இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளனர். சர்வதேச அளவில் மனிதர்களை கடத்தும் விவகாரத்தில் முகமது இம்ரான் கானுக்கு தொடர்பு இருந்தது. இவர் இலங்கையை சேர்ந்தவர்களை இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு கடத்தும் பணியில் தொடர்பு கொண்டுள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications