Bangalore: கண் முன்னே மகள்களை பறிகொடுத்த போலீஸ்காரர்.. சிறிய அலட்சியத்தால் பெங்களூரில் துயரம்! ஷாக் சிசிடிவி
பெங்களூர்: பெங்களூரில் (Bangalore) காலையில் பால் பாக்கெட் வாங்குவதற்காக சென்ற போலீஸ்காரர் ஒருவர் தன் கண் முன்னே இரு மகள்களையும் பறி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. தனியார் பள்ளி பஸ் டிரைவர் செய்த சிறிய அலட்சியத்தால் இரண்டு பிஞ்சு குழந்தைகள் உயிர் பறிபோகியுள்ளது. இது குறித்து சிசிடிவி வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவி பதைபதைக்க வைக்கிறது.
கர்நாடக மாநிலம் யாதகிரியை சேர்ந்தவர் நாகனகவுடா. பெங்களூரில் ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 வயது மகள் வர்ஷாவுடன் ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தனிசந்திரா பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

பால் பாக்கெட் வாங்க சென்ற போலீஸ்காரர்
இவரது அண்ணனும் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே போலீஸ் குடியிருப்பில் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வருகிறார். நாகனகவுடாவின் அண்ணன் வெளியூருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் பால் பாக்கெட் வாங்குவதற்காக தனது அண்ணன் மகள், மற்றும் தன் மகளுடன் பைக்கில் சென்றார்.
குழந்தைகள் இருவரையும் ஸ்கூட்டரின் முன் பகுதியில் அமர வைத்து ஓட்டி சென்றுள்ளார். மத்திய வருவாய் லே-அவுட் பகுதியில் சென்றபோது தனியார் பள்ளி பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. வளைவு பகுதி என்பதால், பஸ் செல்வதற்காக வழிவிட்டு நாகனகவுடா நின்று கொண்டிருந்தார்.
வேகமாக வந்த பஸ்
அப்போது பள்ளி பேருந்து டிரைவர் வேகமாக வந்து திரும்பினார். மேலும் சாலையில் நின்று கொண்டிருந்த நாகனகவுடாவின் ஸ்கூட்டரை பார்க்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் வளைவில் திருப்பியபோது ஸ்கூட்டர் மீது இடித்து தள்ளியபடி சென்றது. அவர் கை காட்டி சொல்லியும் வேகமாக நிற்காமல் டிரைவர் பஸ்சை இயக்கி சென்றார்.
இதில் எதிர்பாராதவிதமாக குழந்தைகள் இருவரும் பஸ்சின் டயருக்கு அடியில் சிக்கினர். அவர்கள் மீது பஸ் ஏறி இறங்கியதில் குழைந்தகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாகனகவுடாக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. தன் கண் முன்பே குழந்தைகள் இருவரும் துடிக்க துடிக்க உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத நாகனகவுடா இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
பஸ் டிரைவர் கைது
இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தனியார் பள்ளி பஸ் டிரைவர் அலட்சியமாகவும், அதிவேகமாகவும் பஸ்சை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஹெண்ணூர் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தனியார் பள்ளி பஸ் டிரைவர் மாரப்பாவை கைது செய்தனர்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்துள்ளது. கடைக்கு சென்று வருவதாக சொல்லி சென்றபோது போலீஸ்காரர் இரு மகள்களை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications