இலங்கை தீவிரவாதிகள் பெங்களூரில் ஊடுருவலாம், ஐடி நிறுவனங்களை தாக்க திட்டமாம்.. போதும்ப்பா நிறுத்துங்க
பெங்களூர்: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள், பெங்களூர் நகரில் ஊடுருவியதாக சமூகவலைத்தளங்களில் வைரலாக சுற்றும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று, இலங்கையின் பல்வேறு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், சுமார் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில், இலங்கையின், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு நேரடி தொடர்பும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மறைமுக தொடர்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதிகளின் புகைப்படத்தை இலங்கை காவல்துறை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அந்த தீவிரவாதிகளில் சிலர் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் வசித்து வந்ததை பார்த்ததாக, சமூக வலைத்தளங்களில் தீவிரமாக போட்டோக்களுடன் செய்திகள் பரவி வருகின்றன.
"This is a hoax. All citizens are requested not to circulate / forward such false messages."
— BengaluruCityPolice (@BlrCityPolice) May 6, 2019
ಸಾರ್ವಜನಿಕರು ಈ ತರಹದ ಸುಳ್ಳು ವದಂತಿಗಳಿಗೆ ಕಿವಿಗೊಡದಿರಲು & ಸಾಮಾಜಿಕ ಜಾಲತಾಣಗಳಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳದಿರಲು ಮನವಿ.
“#ಸುಳ್ಳು_ವದಂತಿಗಳನ್ನ_ನಂಬಬೇಡಿ_ಮತ್ತು_ಪ್ರೋತ್ಸಾಹಿಸಬೇಡಿ” pic.twitter.com/n3g3ft35GK
அடுத்த 15 நாட்களுக்குள் பெங்களூரில், அதுவும் குறிப்பாக ஒயிட்பீல்டு மற்றும் பெல்லந்தூரு பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்களில் பெரிய தாக்குதலை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று அந்த வாட்ஸ்அப் செய்திகள் தெரிவித்தன. இதை பெங்களூரு காவல்துறை மறுத்துள்ளது.
இது தொடர்பாக பெங்களூர் சிட்டி போலீஸ் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இதுபோன்ற தகவல்கள் பொய்யானவை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பெங்களூர்வாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications