நாட்டையே உலுக்கிய பெங்களூர் கலவரம்.. பின்னணியில் நடந்தது என்ன.. என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை
பெங்களூர்: பெங்களூர் கலவரத்தின் பின்னணி என்ன என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) தனது 667 பக்க குற்றப் பத்திரிக்கையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் 11ம் தேதி இரவோடு இரவாக நடந்த கலவரத்தை பெங்களூர் மறக்க முடியாது. டிஜே ஹள்ளி என்ற கிழக்கு பெங்களூர் பகுதியில்தான் இந்த வன்முறை வெடித்தது.
தமிழர்கள் மற்றும் உருது பேசும் முஸ்லீம்கள் கணிசமாக வசிக்கக் கூடிய இந்த பகுதியில்தான், புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி வீடு இருக்கிறது. சம்பவத்தன்று இரவு நூற்றுக் கணக்கானோர் எம்எல்ஏ வீட்டை சூழ்ந்து போராட்டத்தில் குதித்தனர்.

பேஸ்புக் பதிவு
2அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவுக்காரர் தனது பேஸ்புக் பதிவில் முஸ்லீம்கள் தொடர்பாக வெளியிட்ட ஆட்சேபகரமான கருத்துதான் இந்த கொந்தளிப்புக்கு காரணம். அவர் இவ்வாறு போஸ்ட் போடுவது முதல் முறை கிடையாது. பல முறை இப்படி நடந்து கொண்டுள்ளார். ஆனால் எம்எல்ஏ இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோபம்.

திடீரென வன்முறை
சிலர் எம்எல்ஏ வீட்டுக்கு அருகே போராட்டம் நடத்திய நிலையில் சிலர் டிஜே ஹள்ளி காவல் நிலையம் சென்று இந்த பேஸ்புக் பதிவு தொடர்பாக புகார் அளித்தனர். ஆனால் அப்போது திடீரென நிலைமை தலைகீழாக மாறியது. எம்எல்ஏ வீடு மீது சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. உச்சகட்டமாக டிஜே ஹள்ளி காவல் நிலையத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன.

பதிலடி
இதனால் போலீஸ் பதிலடி ஆரம்பித்தது. துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இரவு முழுக்க இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. கடந்த வாரம் 667 பக்க குற்றப் பத்திரிக்கையை என்ஐஏ நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதில் இந்த தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்
247 பேர் மீது குற்றப் பத்திரிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் திடீரென கலவரத்தை தூண்டியுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டதற்கான போட்டோ, வீடியோ, அவர்கள் செய்த சாட்டிங் போன்ற அனைத்து டிஜிட்டல் தகவல்களும் குற்றப் பத்திரிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவினர் அமைதியாக போராட்டம் நடத்த விரும்பியுள்ளனர். ஆனால் சிலர் ஒன்று சேர்ந்து வன்முறையை தொடங்கிவிட்டனர். நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். இவ்வாறு கூறியுள்ளது என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications