நட்பு நாடுகளுக்கு.. ஏவுகணைகள், போர் விமானங்களை சப்ளை செய்ய இந்தியா ரெடி.. ராஜ்நாத் சிங் அறிவிப்பு
பெங்களூர்: இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (ஐ.ஓ.ஆர்) நட்பு நாடுகளுக்கு பல்வேறு வகையான ஏவுகணை சிஸ்டம்கள், லைட் காம்பாக்ட் விமானம் (எல்.சி.ஏ) மற்றும் ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகள் உள்ளிட்ட பிற ஆயுத சிஸ்டங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற ஐ.ஓ.ஆர் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார்.

இந்திய கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளுக்கு இந்தியா எப்போதும் தோழமையாக இருந்து வருவதை குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், "இந்தியா எப்போதும் மனிதாபிமான உதவி, போர் அல்லாத வெளியேற்ற உதவி (NEO) தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது. இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த இயற்கை பேரழிவு தொடர்பான பல நிகழ்வுகளில் முதலில் ஓடி வந்து உதவியது இந்தியாதான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். " என்று அவர் கூறினார்.
அண்டை நாடுகளான மொரீஷியஸ், மாலத்தீவுகள், மடகாஸ்கர், சீஷெல்ஸ் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைத்துள்ளோம். ரெம்டெசிவிர் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகள் போன்ற மருந்துகள் மற்றும் பிற மருத்துவ பொருட்களுடன் அவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெங்களூரில் ஏரோ இந்தியா 2021ன் இரண்டாவது நாளில், ஐ.ஓ.ஆர் பாதுகாப்பு அமைச்சர்களின் கான்க்ளேவ் நடைபெற்றது.
13வது ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த புதன்கிழமை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விமான கண்காட்சியின் நிறைவு நாளாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications