அடுத்த பாண்டிச்சேரியாக மாறும் பெங்களூர்! பீர் விலை அப்படியே குறையுது.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையா, சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். பட்ஜெட்டில் 60 ஆண்டுகள் பழமையான கலால் சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்தார். குறிப்பாக மதுபான வரி விதிப்பு உலக தரத்திற்கு மாற்றப்பட்டு, விலை கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் பெங்களூரில் பீர் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம், மதுபான விலையை நிர்ணயிப்பதில் அரசின் பங்கு முடிவுக்கு வந்துள்ளது. புதிய கொள்கையின் கீழ், விலை நிர்ணயம் கட்டுப்படுத்தப்படாமல், உற்பத்தியாளர்கள் சந்தை போட்டிக்கு ஏற்ப விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம்.

தற்போது கர்நாடகாவில் மதுபானங்கள் 16 அடுக்குகளாக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது மதுபானத்தை தயாரிக்க ஆகும் உற்பத்தி செலவு, அதன் தரத்தை வைத்து,
- குறைந்த விலை அடுக்கு
- நடுத்தர விலை அடுக்கு
- உயர்தர விலை அடுக்கு
புதிய வரி விதிப்பு முறை
என பல பிரிவுகள் உள்ளன. கர்நாடகாவில் இப்படி 16 பிரிவுகள் இருக்கின்றன. இந்நிலையில், இந்த பிரிவுகளை 16லிருந்து 8 ஆக சுருக்க மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. அதேபோல இனிமேல் மதுபானத்தின் மொத்த அளவை வைத்து வரி விதிக்கப்படாது. மாறாக அதில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவை வைத்துதான் வரி விதிக்கப்படும். இந்த மாற்றம் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் படிப்படியாக அமலாகும்.
உரிமம் வழங்கும் முறைமாற்றம்
மதுபானங்கள் கடத்தப்படுவதை தவிர்க்கவும், பிளாக்கில் வருவாய் ஈட்டுவதை தடுக்கவும், பிளாக்செயின் அடிப்படையிலான கண்காணிப்பு வசதியை உருவாக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. அதேபோல மதுபான ஆலைகள் இனி 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இனி இந்த ஆலைகளுக்கான லைசென்ஸ், ஆன்லைனில் தானாகவே புதுப்பிக்கப்படும்.
மதுபான சுற்றுலா
இந்த பட்ஜெட் ஆல்க்-பீர் சுற்றுலாவையும் ஊக்குவிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதாவது, இனி சுற்றுலா பயணிகள் நேரடியாக மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு சென்று அங்கு சுவை பார்த்து, சரக்கை வாங்கிக்கொள்ளலாம். ஊட்டியில் தேயிலை தூள் உற்பத்தி இடங்களுக்கு நேரில் செல்லும்போது, டீ சாம்பிள் கொடுப்பார்களே அதுபோல.. இனி கர்நாடகாவில் மதுபானங்களை, உற்பத்தி ஆலைகளுக்கே சென்று சுவைக்க முடியும். அங்கிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளவும் முடியும். பீர் லேபிள்களில் மால்ட், சர்க்கரை எவ்வளவு சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் நீக்கப்பட்டது.
வருவாய் இலக்கு
நடப்பு நிதியாண்டில், கலால் வருவாய் 12.7 சதவீதம் அதிகரித்து, பிப்ரவரி மாத நிலவரப்படி ரூ. 36,492 கோடியை எட்டியுள்ளது. வருகின்ற 2026-27 நிதியாண்டுக்காக, மாநில அரசு ரூ. 45,000 கோடி என்ற லட்சிய வருவாய் இலக்கை நிர்ணயித்துள்ளது.
பட்ஜெட்டில் கலால் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் இனி, கர்நாடகாவில் பீர்களின் விலை குறையலாம் என்று சொல்லப்படுகிறது.
-
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications