காரணமே வேற.. "இருமல் மருந்தும் + இரும்பு மனுஷியும்".. இறுக்கிய சுசனா சேத்.. திரும்ப திரும்ப அதேதான்
பெங்களூர்: தன்னுடைய குழந்தை, கணவரின் ஜாடையில் இருந்துள்ளதும், சுசனா சேத்துக்கு பிடிக்கவில்லை.. அந்த பிஞ்சுவை ஈவிரக்கமின்றி கொன்றதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
தான் தங்கியிருந்த ஹோட்டல் ரூமில், 4 வயது மகனை கொடூரமாக கொன்றுள்ளார் சுசனா சேத் என்ற மெத்த படித்த அறிவாளி.. குழந்தையின் சடலத்தை சூட்கேஸில் வைத்து, ஓட்டலையும் காலி செய்துவிட்டு டாக்ஸியில் தப்பிச்செல்லும்போது, போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பெனிகள்: 10 வருடங்களுக்கு முன்பு, ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்த வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்துள்ளார் சுசனா சேத்.. இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றிவிடவும், விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார் வெங்கட்ராமன். ஆனால், விவகாரத்து தர விரும்பாத சுசனா சேத், கணவன் மீதிருந்த ஆத்திரத்தில் குழந்தையை கொன்றுவிட்டார்.
சுசனா சேத் கடந்த 2022ல், வெங்கட்ராமன் மீது குடும்ப வன்முறை தொடர்பான புகார் வழங்கியுள்ளார். விவாகரத்து வழக்கில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெங்கட்ராமன், தன்னுடைய 4 வயது மகனிடம் பேச கோர்ட் அனுமதி தந்துள்ளது. இந்த உத்தரவை சுசனா சேத்-தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று விசாரணை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருமல் மருந்து: குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது, ஆனால், தலைகாணி அல்லது துணியால் குழந்தையை நெரித்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
ஏற்கனவே தன்னுடைய பையில் ஒரு இருமல் பாட்டில் வைத்திருந்துள்ளார்.. இன்னொரு இருமல் மருந்தையும் ஓட்டல் ஊழியரிடம் சொல்லி வாங்கி வர செய்துள்ளார். ஒரு பாட்டில் சிறியது, இன்னொரு பாட்டில் பெரியது. 2 இருமல் பாட்டிலில்உள்ள மருந்தையும் குழந்தைக்கு ஊற்றி உள்ளார்.
ஓவர்டோஸ் ஆகிவிடவும் குழந்தைக்கு மயக்கம் வந்துள்ளது.. அப்போதுதான் கழுத்தை நெரித்துள்ளார்.. ஆனால், கைகளால் நெரிக்காமல், துணியால் நெரித்துள்ளார்.. இதனால் குழந்தைக்கு மூச்சு மேலும் திணறியுள்ளது.. ஒரு கட்டத்தில், முகம் சிவந்துபோய், மூக்கிலிருந்து ரத்தம் நிறைய கொட்டியுள்ளது.. அப்போதுதான் கடைசியாக கழுத்தை இறுக்கியிருக்கிறார்.
ரூம் சர்வீஸ்: ரூமைவிட்டு கிளம்பும்வரை, ரூம் சர்வீஸைகூட அறைக்குள் அனுமதிக்காமல் இருந்துள்ளார்.. காரில் சடலத்துடன் முன்சீட்டில் உட்கார்ந்துக்கொண்டு, AC-யை அதிகமாக வைத்துக்கொண்டு, வழியெல்லாம் காருக்குள் சென்ட் அடித்து கொண்டே வந்தாராம்..
தற்போது 6 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் சுசனா சேத். குழந்தையை எப்படி கொன்றார் என்ற பகீர் தகவல்கள் வாக்குமூலங்களில் வெளியாகி கொண்டிருக்க, மறுபுறம் போலீசாரின் விசாரணைகளும் துரிதமாகி வருகின்றன.
விவாகரத்து: அந்தவகையில் 2 விதமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.. கணவர் வெங்கட்ராமனுக்கு 9 லட்சம் ரூபாய் சம்பளமாம்.. விவாகரத்து விசாரணையின்போது, வெங்கட்ராமன் 9 லட்சம் சம்பாதிப்பதை சுட்டிக்காட்டி சுசனா சேத், குழந்தையின் பராமரிப்பிற்காக மாதம் 2.5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு வாதாடினாராம். பணத்தில் குறியாய் இருந்த சுசனா சேத், குழந்தையை வெங்கட்ராமனுடன் வீடியோ காலில் பேசக்கூட அனுமதிப்பது கிடையாதாம்.
இந்நிலையில், சுசனா சேத் தங்கியிருந்த ஹோட்டல் ரூமில், ஒரு கடிதம் கிடைத்துள்ளதாம்.. இந்த கடிதத்தை சுசனா சேத், தன்னுடைய தற்கொலைக்கு முன்பு, கைப்பட எழுதி வைத்ததாகவும் தெரிகிறது.
கடிதம்: அந்த கடிதத்தில், "என்னுடைய கணவர், என்னுடைய மகனை சந்திக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என்று குறிப்பிட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த கடிதத்தை கோவா போலீசார் சீல் செய்து, நிபுணர்கள் பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை எழுதியது சுசனா சேத் தானா? எப்போது எழுதினார்? என்பதெல்லாம் இனிமேல் தெரியவரும்.
ஆனால், கடிதம் வரைக்கும் எழுதி வைத்துள்ள சுசனா சேத், தன்னுடைய மகனை கொன்றதாக இதுவரை ஒப்புக் கொள்ளவேயில்லையாம்.. தன் மகன் எப்படி இறந்தான் என்றே தெரியாது என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறாராம். இத்தனைக்கும், போலீஸ் விசாரணையில் தற்போது இருந்தபோதும்கூட, கணவனுடன் என்ன பிரச்சனை? ஏன் இவ்வளவு வன்மம்? எதற்காக கருத்து வேறுபாடு என்பதைகூட போலீசில் சொல்லவில்லையாம்..
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications