பெங்களூரு சுடுகாட்டில் வரிசையில் காத்திருக்கும் சடலங்கள் - டோக்கன் பெற்று உடல் தகனம்
பெங்களூரில் சுடுகாட்டில் பிணங்கள் குவிந்து கொண்டு இருப்பதை அடுத்து ஒவ்வொரு பிணத்திற்கும் டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் அந்த டோக்கன்கள் அடிப்படையில் தகனம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பெங்களூரு: கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சடலங்களை தகனம் செய்ய பெங்களூரு சுடுகாடுகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் பல சடலங்கள் குவிந்துள்ளதால் தற்போது அங்கு டோக்கன் முறையில் உடல் தகனம் நடைபெறுகிறது.
கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறி வருகிறது.

தினம் தினம் ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இளம் வயதினரும் கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர். தினசரியும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். பெங்களூரில் கொரோனாவால் பலியானவர்களை தகனம் செய்ய சுடுகாடுகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் பல சடலங்கள் குவிந்துள்ளதால் தற்போது அங்கு டோக்கன் முறையில் உடல் தகனம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாள் ஒன்றுக்கு 20 சடலங்களை மட்டுமே தகனம் செய்ய முடியும் என்பதால் சுடுகாடுகளில் சடலங்களுடன் உறவினர்களும் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
பெங்களூரில் சுடுகாட்டில் பிணங்கள் குவிந்து கொண்டு இருப்பதை அடுத்து ஒவ்வொரு பிணத்திற்கும் டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் அந்த டோக்கன்கள் அடிப்படையில் தகனம் செய்யப்பட்டு வருகிறது.
பெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை முழுதும் நிரம்பி விட்டது என்றும் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications