என் நாயை காணவில்லை.. அதன் மதிப்பு ரூ.8 கோடி.. பெங்களூரு போலீசை அதிர வைத்த சேத்தன்!
பெங்களூரு: பெங்களூருவைச் சேரந்தவர் தனது நாயை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். அந்த நாயின் மதிப்பு 8 கோடி ரூபாய் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பனசங்கரியில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் வசிப்பவர் சேத்தன். இவர் ஹனுமந்த நகர் போலீஸ் ஸ்டேசனில் நிலையத்துக்கு வந்து நாயைக் காணவில்லை என புகார் கொடுத்தார்.

புகாரை எடுத்துக்கொண்ட காவல்துறையினர் நாயின் மதிப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். . தன்னுடைய நாயின் விலை ரூ.8 கோடி என்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலாஸ்கன் மலமுடே (Alaskan Malamute Dog) நாய் இனம் என்றும் அவர் தன் புகாரில் தெரிவித்து இருக்கிறார்.
தன்னுடைய செல்ல நாயை ஒரு ஆட்டோ டிரைவர் திருடி சென்றிருக்கலாம் என தான் சந்தேகப்படுவதாகவும் சேட்டன் கூறியிருக்கிறார்.
மேலும் தன் நாயை யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நாய் காணாமல் போன சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications