பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன்
பெங்களூர்: பெங்களூரு நகரில் இப்போது ஒரு அதிர வைக்கும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. யாரும் எதிர்பார்க்காத வகையில் அங்குள்ள 40 லட்சம் பேர் ஒரு ரகசிய செயல்பாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.. அந்த ரகசியத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. அது என்ன தெரியுமா?
இந்தியாவில் திருமணமானவர்கள் பயன்படுத்தும் டேட்டிங் செயலிகளின் வளர்ச்சி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. குறிப்பாக "க்ளீடன்" போன்ற செயலிகளை இந்தியாவில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது..

க்ளீடன் ஆப் - ரகசிய உறவு
இந்த க்ளீடன் ஆக் என்றால் என்ன தெரியுமா? கல்யாணம் ஆனவர்கள் தங்களுக்கு வெளியே ரகசியமாக புதிய நண்பர்களையோ அல்லது துணைகளையோ தேடிக்கொள்ள இந்தச செயலி பயன்படுகிறதாம்.. அதாவது கள்ளக்காதல், டேட்டிங் செய்ய நினைப்பவர்கள், இந்த ஆப்பை பயன்படுத்துவார்கள்... ஆனால், பயனர்களின் விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்..
இந்த ஆப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கைதான் ஆண்டுக்கு ஆண்டு மிக வேகமாக அதிகரித்து வருகிறதாம்.. அந்தவகையில், இப்போது ஒரு புள்ளி விவரம் வெளியாகி உள்ளது..
கள்ளக்காதல் ரகசிய உறவு
இந்த லிஸ்ட்டில் இந்தியாவின் எந்த நகரம் முதலிடம் பிடித்துள்ளது என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.. பொதுவாக மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்கள் தான் முன்னிலையில் இருக்கும் என்று பலரும் நினைத்தார்கள்.. ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப நகரமான பெங்களூரு இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது..
பெங்களூருவில் வசிக்கும் ஐடி ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த கலாச்சாரம் அதிகம் பரவி இருப்பது தெரியவந்துள்ளது.. பெங்களூருவை தொடர்ந்து மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.. தென்னிந்தியாவில் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் இந்த செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது..
பெங்களூரு டாப் சிட்டி
மக்கள் ஏன் இது போன்ற ஆப்களை தேடிச் செல்கிறார்கள் என்பதற்கு சமூக ஆர்வலர்கள் சில முக்கிய காரணங்களை கூறுகிறார்கள்.. இன்றைய அவசர உலகில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே போதிய நேரம் செலவிட முடியாமல் போவது ஒரு முக்கிய காரணமாக உள்ளது..
வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.. குறிப்பாக 34 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இந்த செயலியை அதிகம் பயன்படுத்துகிறார்களாம்.. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக ஆர்வம் காட்டி வருவது ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது..
சீக்ரெட் தகவல்கள்
முன்பெல்லாம் இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக பேச தயங்கிய மக்கள் இப்போது டிஜிட்டல் தளங்கள் மூலம் ரகசியமாக தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்..
பயனர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால் எவ்வித பயமுமின்றி மக்கள் இதில் இணைகிறார்கள்.. கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.. திருமணத்திற்கு புறம்பான உறவு என்பது குற்றமல்ல என்று நீதிமன்றம் கூறிய பிறகு இதுபோன்ற செயலிகளின் வளர்ச்சி இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது..
பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் மக்கள் சந்திக்கும் தனிமை மற்றும் நவீன வாழ்க்கை முறை மாற்றங்களே இதற்கு அடிப்படையாக உள்ளது..
மாறி வரும் வாழ்க்கை சூழல்
இப்போது 40 லட்சம் என்று இருக்கும் இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் இன்னும் பல மடங்கு உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இது இந்திய குடும்ப அமைப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது..
திருமண உறவில் ஏற்படும் சலிப்பை போக்க இது போன்ற தவறான வழிகளை தேடுவது சமூக ரீதியாக பல சிக்கல்களை உருவாக்கும்.. உறவுகளில் நேர்மை குறைந்தால் அது ஒட்டுமொத்த குடும்ப நிம்மதியையும் பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..!!!
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications