பெங்களூருவுக்கு வார்னிங்.. மார்ச் 1ம் தேதியே தொடங்கும் கோடைக்காலம்! வெயில் வதைக்கப்போகுது
பெங்களூர்: பெங்களூரில் மார்ச் 1ம் தேதி முதல் கோடைக்காலம் தொடங்குகிறது. மார்ச் 1ம் தேதியிலேயே கோடைகாலம் தொடங்கும். மார்ச் மாதத்தில் 35 - 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் வார்னிங் செய்துள்ளது.
பெங்களூரில் தற்போது படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பெங்களூரில் அதிகபட்சமாக 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது வழக்கத்தை விட 1 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

எச்ஏஎல் விமான நிலையத்தில் 32.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது வழக்கத்தை விட 0.8 சதவீதம் அதிகமாகும். அதேபோல் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 32.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது வழக்கத்தை விட 1.4 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
இந்நிலையில் தான் கோடைக்காலம் முன்கூட்டியே மார்ச் 1ம் தேதி பெங்களூரில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் சிஎஸ் பட்டீல் கூறியுள்ளதாவது:
''பெங்களூர் நகரில் தற்போது படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த முறை மார்ச் 1ம் தேதியிலேயே கோடைகாலம் தொடங்கும். மார்ச் மாதத்தில் 35 - 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம்.
பெங்களூரை எடுத்து கொண்டால் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக கடந்த 2016 ஏப்ரல் மாதம் 39.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி இருந்தது. அதற்கு முன்பாக என்றால் கடந்த 1931 ம் ஆண்டு மே மாதம் 38.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது'' என்றார்.












Click it and Unblock the Notifications