பயோகான் தலைவர் கிரன் மஜும்தாருக்கு கொரோனா தொற்று
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பயோடெக்னாலஜி துறையின் முன்னணி நிறுவனமான பயோகான் தலைவர் கிரன் மஜும்தாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது பயோகான் நிறுவனம். இதன் தலைவரான கிரன் மஜும்தார் நேற்று இரவு தமது ட்விட்டர் பக்கத்தில் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார்.

அதில், லேசான அறிகுறிகளுடன் தமக்கும் கொரோனா இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என்று பலரும் ட்வீட்டில் பதிவு செய்து வருகின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் உள்ளிட்டோரும் கிரன் மஜும்தார் குணமடைய வேண்டும் என வாழ்த்தி ட்வீட் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications