கள்ளச்சந்தையில் விற்கப்படும் தடுப்பூசிகள்...பயன்படுத்தி வரும் வி.ஐ.பி.க்கள்...அதிர்ச்சி தகவல்கள்!
பெங்களூரு: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் முன்பே கள்ளச்சந்தையில் தடுப்பூசிகள் விற்பனை செய்யப்பட்டு வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பணக்கார நோயாளிகள் சிலர் கள்ளச்சந்தையில் விற்கப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்தி வருவதாக கர்நாடகா மாநில டாக்டர்கள் சிலர் தெரிவித்து உள்ளனர்.
கள்ள சந்தையில் கொரோனா தடுப்பூசிகள் விற்கப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பூசி போடும் பணி
உலக நாடுகளை தொடர்ந்து அச்சறுத்தி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. இதனால் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டன. இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் வருகிற 16-ம் தேதி முதல் போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

கள்ளச்சந்தையில் விற்பனை
இந்த நிலையில் மத்திய அரசு பொதுமக்களுக்கு முறையாக தடுப்பூசி போடும் முன்பே தடுப்பூசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சில பணக்கார நோயாளிகள் கள்ளச்சந்தையில் விற்கப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்தி வருவதாகவும், அது தொடர்பான சந்தேகங்களை தங்களிடம் கேட்டு வருவதாகவும் அந்த மாநிலத்தில் உள்ள சில டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

நம்பகத்தன்மை இல்லை
கள்ளச்சந்தையில் சில விற்பனையாளர்கள் வழங்கும் இந்த தடுப்பூசிகள் உண்மையானவையா? அதனை போட்டு கொள்ளலாமா என சில விஐபிக்கள் தங்களிடம் போன் செய்வதாகவும், அந்த தடுப்பூசியின் மூல தயாரிப்பு, விலை, பிராண்ட் மற்றும் நம்பகத்தன்மையை அவர்களால் கண்டறிய முடியவில்லை என்றும் டாக்டர்கள் கூறினர்.

சட்டவிரோதமானது
பெங்களூரைச் சேர்ந்த மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், கள்ளசந்தையில் தடுப்பூசிகள் வாங்கிய ஒரு சிலரிடம் இருந்து எனக்கு சில தொலைபேசி அழைப்புகள் வந்தது. தாங்கள் தடுப்பூசி போட்டதாக அல்லது சில நபர்களால் தடுப்பூசி வழங்கப்பட்டதாகக் கூறும் நபர்களைச் நான் சந்தித்தேன். தடுப்பூசி இந்தியாவில் முறைப்படி இதுவரை விற்பனைக்கு அனுமதிக்கப்படாததால் பயமாக இருக்கிறது. நாட்டில் விற்பனைக்கு அனுமதிக்கப்படாத எந்தவொரு மருந்தையும் உட்கொள்வது சட்டவிரோதமானது என்றார் அவர்.

அரசு கண்காணிக்க வேண்டும்
இது குறித்து மற்றோரு டாக்டர் கூறுகையில், கள்ள சந்தையில் கொரோனா தடுப்பூசிகள் விற்கப்படுவதை அரசு கண்காணிக்க வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே இதனை பெற முடியும் என்பதால் இது ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் அத்தகைய தடுப்பூசிகளை அவர்கள் எடுத்து கொள்கிறார்கள். ஆனால் தெளிவில்லாத, பயனற்ற தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications