காந்தியின் சுதந்திர போராட்டத்தை நாடகம் என விமர்சித்த எம்.பி. அனந்தகுமாருக்கு பாஜக மேலிடம் நோட்டீஸ்
பெங்களூரு: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தை நாடகம் என்று விமர்சித்து எம்.பி. அனந்தகுமார் ஹெக்டேவுக்கு பாஜக மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான அனந்தகுமார் ஹெக்டோ தொடர்ந்து மகாத்மா காந்தி குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனந்தகுமார் ஹெக்டே, மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என விமர்சித்தார்.
மேலும் இப்படிப்பட்ட ஒரு நபரையா மகாத்மா என்று அழைக்கிறார்கள்.. இதனால் என் ரத்தம் கொதிக்கிறது. ஆங்கிலேயரால் காந்தி ஒருமுறைகூட தாக்கப்படவில்லையே என்றும் அனந்தகுமார் பேசியிருந்தார்,
அனந்தகுமார் ஹெக்டேவின் இப்பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய கருத்துக்காக அனந்தகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
ஜாமியா பல்கலை. துப்பாக்கி சூடு...ரூ10,000க்கு துப்பாக்கி விற்ற உ.பி. ஆசிரியர் சிக்கினார்
இந்நிலையில் அனந்தகுமார் ஹெக்டேவின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு பாஜக மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என கர்நாடகா பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.