தமிழ்நாட்டு பெண்ணை திருமணம் செய்தார் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா! அண்ணாமலை பங்கேற்று வாழ்த்து!
பெங்களூர்: பாஜக யுவ மோர்ச்சா தலைவரும் பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை இன்று திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பெங்களூரில் இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பாஜக பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞரான தேஜஸ்வி சூர்யா. பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவின் தலைவராக இருக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்.பியாக இருக்கிறார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் வென்று எம்.பியான தேஜஸ்வி சூர்யா, தற்போது அதே தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.பியாக பொறுப்பு வகித்து வருகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்னாடக இசைப் பாடகியான சிவஸ்ரீ, பரதநாட்டியக் கலைஞரும் கூட. சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் அப்பா சீர்காழி ஸ்ரீ ஜெ. ஸ்கந்தபிரசாத் ஒரு மிருதங்க வித்வான். சிவஸ்ரீ பி.டெக் படித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரத நாட்டியத்தில் பட்டம் பெற்றுள்ளார். சமஸ்கிருதத்தில் முதுகலை படிப்பு படித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் - 2 படத்தின் வந்த வீர ராஜ வீரா பாடலை கன்னடத்தில் பாடியவர். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின்போது சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் பாடிய ராமரைப் பற்றிய பாடலைப் பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், ஓரிரு நிகழ்ச்சிகளில் தேஜஸ்வி சூர்யாவும், சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் ஒன்றாக கலந்துகொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டு மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
தேஜஸ்வி சூர்யாவும் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்களும், நெருக்கமான அரசியல் பிரமுகர்களும் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

தேஜஸ்வி - சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத் திருமணத்தில் மத்திய அமைச்சர் வி. சோமண்ணா, எம்.பி. சி.என். மஞ்சுநாத், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வினய் குருஜி, முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், தேஜஸ்வி - சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. புதுமண ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வரும் மார்ச் 9ஆம் தேதி பெங்களூர் பேலஸ் மைதானத்தில் உள்ள காயத்ரி விஹாரில் தேஜஸ்வி சூர்யா மற்றும் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications