Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் தேர்தல் முடிந்த கையோடு.. பாஜகவின் சிடி ரவி மீது பாய்ந்த வழக்கு.. என்ன காரணம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இரு பிரிவனருக்கும் இடையே பகைமையை ஏற்படுத்த முயன்றதாக கூறி கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவரான சிடி ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. முதல்கட்டத்தில் 102 தொகுதிகளுக்கும் அடுத்த கட்டத்தில் 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளன.

Case Against BJP Leader CT Ravi Over Social Media Post amid Lok Sabha election

தேர்தல் ஆணையம்: வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருவதால் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேநேரம் முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு பிரச்சாரத்தில் வெறுப்பு பேச்சு சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே கர்நாடக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான சி.டி.ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இரு பிரிவினருக்கு இடையே வெறுப்பு மற்றும் பகையை ஊக்குவிப்பது போல கருத்து பதிவிட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சிக்கமகளூரு தேர்தல் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு: இது தொடர்பாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில், " சி.டி.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவிற்காக சிக்கமகளூரு தேர்தல் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் ஐபிசி 505(2) (பகை, வெறுப்பை ஏற்படுத்தும் கருத்தை சொல்வது) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினருக்கு இடையே வெறுப்பு மற்றும் பகைமையை ஊக்குவித்த புகாரில் பசவனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தல்: கர்நாடகாவை பொறுத்தவரை அங்கே மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. அதில் 14 தொகுதிகளுக்கு நேற்று நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு 3ஆம் கட்டத்தில் வரும் மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடகாவை பொறுத்தவரை அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி மோதல் நிலவும் மாநிலம் என்பதால் ரொம்பவே முக்கியமானது. கடந்த காலங்களில் கர்நாடகாவில் லோக்சபா தேர்தல்களில் பாஜகவுக்கே அதிக இடம் கிடைத்துள்ளன. மறுபுறம் காங்கிரஸ் இந்த முறை கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பதால் அவர்களும் அதிக இடங்களில் வெல்ல முனைப்பு காட்டுகிறார்கள்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக அப்படியே மொத்தமாக 25 இடங்களில் பெரிய வெற்றியை பெற்றது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+