தண்ணீர் திறக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.. காவிரி ஆணையத்தில் கர்நாடகா சீராய்வு மனு தாக்கல்
பெங்களூர்: தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடக அரசு ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் தமிழ்நாடுக்கும் கர்நாடகாவிற்கும் இடையே மோதல் நீடிக்கிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக்குழுவும் பிறக்கிற உத்தரவுகளுக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுகளில் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கூடிய காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது. இந்த பரிந்துரையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 3 ஆயிரம் கன அடி நீர் என்பதை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று கர்நாடகா தெரிவித்துள்ளது. கர்நடகா தாக்கல் செய்துள்ள மனுவில், தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க முடியாத சூழலில் இருக்கிறோம். கர்நாடகாவின் கருத்தை கருத்தில் கொள்ளாமல் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளது.
மேலும் மேகதாது அணை விவகாரத்தையும் உடனே விசாரிக்க வேண்டும் எனவும் தனது மனுவில் கூறியுள்ளது. காவிரியில் நீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருபக்கம் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கர்நாடக அரசு ,காவிரி மேலாண்மை ஆணையத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications