பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும்.. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அதிரடி!

தமிழகத்திற்கு நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை..! மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு...

    பெங்களூர்: தமிழகத்திற்கு நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் வட மாநிலங்களில் நல்ல மழை பெய்கிறது. அதே சமயம் கர்நாடகாவிலும் தலைக்காவிரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    Cauvery water will be released from Karnataka to TN for the next five days from tomorrow

    இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. அதேபோல் மேகதாது உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு இன்னும் சில நாட்களில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

    இதற்கு இடையில் இன்று பெங்களூரில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடந்தது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பாக உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    தேசிய மருத்துவ ஆணைய மசோதா.. எதிர்ப்பு தெரிவித்த அதிமுக.. மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு தேசிய மருத்துவ ஆணைய மசோதா.. எதிர்ப்பு தெரிவித்த அதிமுக.. மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு

    கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஜூன், ஜூலையில் தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் 9.50 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது.

    ஆனால் கர்நாடக அரசு காவிரி ஒழுங்காற்று குழு ஆணையின்படி ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது கர்நாடகா அதை செய்யாமல் வஞ்சித்தது குறிப்பிடத்தக்கது. இது தமிழக விவசாயிகளை பாதித்தது.

    நாளை காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் என்ற செய்தி டெல்டா விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 8 தேதி டெல்லியில் நடக்கும்.

    English summary
    Cauvery water will be released from Karnataka to TN for the next five days from tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X