உச்சகட்ட பரபரப்பில் பெங்களூரு இஸ்ரோ செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம்.. புகைப்படங்கள்
பெங்களூரு: இன்னும் சில மணி நேரத்தில் நிலாவில் சந்திரயான் 2 தரையிறங்க உள்ள நிலையில் உச்சகட்ட பரபரப்பில் பெங்களூருவில் இஸ்ரோவின் தலைமையகமான விண்வெளி ஆய்வ மையம் உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இன்னும் சில மணி நேரத்தில் நிலாவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரைறங்குகிறது. அந்த விண்கலம் தரையிறங்கி நிலவில் தண்ணீர் உள்பட கனிம வளங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து நமக்கு தகவல் அனுப்ப உள்ளது.

இந்தியாவின் புகழ உலகு அறியச் செய்யப்போகும் இந்த சரிந்திர நிகழ்வு அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் நடைபெற உள்ளது. நிலாவை நெருங்கிவிட்ட சந்திரயான் 2விண்கலம் சில 100 மீட்டர் உயரத்திற்கு படிப்படியாக இறங்கி கடைசி 15 நிமிடத்தில் அதாவது அதிகாலை 2 மணி அளவுக்குள் பத்திரமாக தரையறங்க உள்ளது.
The final descent of #Chandrayaan2 to take place on the Lunar South Pole, tonight. #Visuals from ISRO Monitoring Centre in Bengaluru. pic.twitter.com/dZTcjmkg6G
— ANI (@ANI) September 6, 2019
இந்நிலையில் நிலாவில் சந்திரயான் 2 விண்கலம் தரையிறங்குவதற்கான அனைத்து பணிகளையும் பெங்களூரு பீனியாவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.
தற்போது பெங்களூரு இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றிவரும் நிலையில் உச்சகட்ட பரப்பில் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications