வலுவான கால்கள்.. கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறன் கொண்ட லேண்டர்.. இதுதான் சந்திரயான் 3- இஸ்ரோ
Recommended Video
பெங்களூர்: அடுத்த ஆண்டில் சந்திரயான் 3 வடிவமைக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த நிலையில் செப்டம்பர் 5-ஆம் தேதி நிலவில் லேண்டர் மெதுவாக தரையிறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இஸ்ரோவுடனான தொடர்பை லேண்டர் துண்டித்து கொண்டது.
இதனால் அதன் நிலை தெரியாமல் விஞ்ஞானிகள் சோகமடைந்தனர். இதையடுத்து நிலவை சுற்றி வந்த ஆர்பிட்டர், நிலவில் சாய்வாக விழுந்திருந்த லேண்டர் குறித்த புகைப்படங்களை அனுப்பியது. இதனால் மெதுவாக தரையிறங்குதலுக்கு பதிலாக வேகமாக லேண்டர் தரையிறங்கியது தெரியவந்தது.

இஸ்ரோ
இதையடுத்து லேண்டருடனான சிக்னலை பெற நாசாவுடன் இணைந்து இஸ்ரோ முயற்சித்தது. ஆனால் அது முடியவில்லை. இதையடுத்து சந்திரயான் 3 திட்டத்தை வடிவமைக்க இஸ்ரோ முயற்சித்து வருகிறது.

தயாரிக்கப்படும்
இதுகுறித்து இஸ்ரோ கூறுகையில், சந்திரயான் 3 குறித்து திட்ட அறிக்கை தயார் செய்ய உயர் மட்ட குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் தலைமையில் தயாரிக்கப்படும்.

கவனத்தில்
அடுத்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான் 3 திட்டத்தை உருவாக்குவதற்கான வழிமுறைககளை அந்த கமிட்டி வழங்கிவிடும். இந்த முறை ரோவர், லேண்டர் மற்றும் தரையிறங்கும் இயக்கங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.

தரையிறங்குவதில் தாமதம்
சந்திரயான் 2 வில் இருந்த தவறுகள் இந்த முறை திருத்திக் கொள்ளப்படும். பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல் வெற்ற பிறகு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த திட்டம் அடுத்த நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும். சந்திரயான் 3-க்கிற்காக உருவாக்கப்படும் லேண்டரின் கால்கள் வலுவுடையதாகவும் எந்த சூழல் ஏற்பட்டாலும் தரையிறங்கும் போது திறனுடன் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications