Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோலி-கம்பீர்-நவீன் உல்ஹக் மோதல்.. பிள்ளையார் சுழி போட்ட முகமது சிராஜ்? அப்படியா? காரணம் இதுதானாமே

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஐபிஎல்லில் நேற்று பெங்களூர்-லக்னோ அணிகள் மோதின. இதில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பல காரணங்கள் உள்ளன. இந்நிலையில் தான் நேற்றைய மோதலை பெங்களூர் அணியின் முகமது சிராஜ் தொடங்கி வைத்ததாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படி அவர் என்ன செய்தார்? என்பது பற்றி பார்ப்போம்.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. இதில் முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது.

Clash Between Virat Kohli, Gautam Gambhir and Naveen Ul Haq: Brawl Trigger point is Mohammad Siraj?

மைதானம் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்ததால் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 19.5 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. 18 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூர் வென்ற நிலையில் அடுத்தக்கட்ட பரபரப்பு என்பது அதன்பிறகே தொற்றியது. அதாவது இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் கை குலுக்கி சென்றனர். அப்போது லக்னோ அணி பயிற்சியாளரான கம்பீருக்கும், பெங்களூர் அணியின் விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இரு அணி வீரர்கள், நடுவர்கள் தலையிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர்.

Clash Between Virat Kohli, Gautam Gambhir and Naveen Ul Haq: Brawl Trigger point is Mohammad Siraj?

முன்னதாக போட்டியின்போது லக்னோ பேட்டிங் செய்தபோது 17வது ஓவரை பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசினார். அப்போது லக்னோ அணியின் நவீன் உல் ஹக் கிரீஸ்க்குள் நின்றாலும் கூட சிராஜ் பந்தை ஸ்டெம்ப் மீது வீசினார். இருவருக்கும் இடையே வார்த்தை பரிமாற்றம் நடைபெற்றது. இதையடுத்து தான் நவீன் உல் ஹக் மற்றும் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டி நடுவர், லக்னோ வீரர் அமித் மிஸ்ரா இருவரும் உடனடியாக தலையிட்டு கோலியையும், நவீன் உல் ஹக்கையும் சமாதானம் செய்தனர். அதன்பிறகு நவீன் உல் ஹக் கேட்ச் மூலம் அவுட் ஆகினார்.

இறுதியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. கோலி ஆக்ரோஷமாக வெற்றியை கொண்டாடினார். முந்தைய போட்டியில் பெங்களூர் அணி தோற்றபோது கம்பீர் ஆர்சிபி ரசிகர்களை பார்த்து பேசாமல் இருக்கும்படி சைகையில் கூறினார். அதேபோல் கோலியும் செய்தார். மேலும் கோலியுடன் கை குலுக்கியபோது நவீன் உல் ஹக் திடீரென கோலியின் கையை பிடித்து லேசாக இழுத்தார்.

Clash Between Virat Kohli, Gautam Gambhir and Naveen Ul Haq: Brawl Trigger point is Mohammad Siraj?

இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து லக்னோ வீரர் கெயில் மையிஸ் கோலியுடன் பேசியபோது கம்பீர் குறுக்கீட்டார். கோலியிடமிருந்து மையிசை தனியே அழைத்து சென்றதால் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் முகமது சிராஜ் தான் மோதலுக்கு காரணம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது முகமது சிராஜ் தான் வீசிய 17 வது ஓவரில் ஸ்டெம்பில் பந்தை கொண்டு எறியாமல் விட்டு இருந்தால் பிரச்சனை என்பது வந்திருக்காது என ரசிகர்கள் இணையதளங்களில் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+