தனிமையில் வாடிய விதவை.. ஆறுதல் வலைவீசிய இளைஞர்.. நண்பரின் மனைவியையே மறுமணம் செய்து.. சபாஷ்
நண்பரின் மனைவியை மறுமணம் செய்த இளைஞருக்கு பாராட்டு குவிகிறது
பெங்களூரு: நண்பரின் மனைவியையே திருமணம் செய்து கொண்டார் ஒரு இளைஞர்.. இந்த திருமணம் செய்ததன் பின்னணிக்காகவே, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா அருகே உள்ளது முள்ளூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் சேத்தன்குமார் 41 வயதாகிறது.
இவரது மனைவி பெயர் அம்பிகா.. ஹனூர் டவுனை சேர்ந்தவர்.. 30 வயதாகிறது.. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது..

கர்நாடகா
சேத்தன்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.. இந்நிலையில், கொரோனா 2-வது அலையின்தாக்கம் கர்நாடகாவில் அதிகரிக்க ஆரம்பித்தது.. அப்போது ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.. அந்த சமயத்தில் சேத்தன்குமாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.. உடனடியாக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

பாதிப்பு
எனினும், தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்... கணவரின் மரணம் அம்பிகாவை நிலைகுலைய வைத்துவிட்டது.. கணவனை மறக்க முடியாமல், அவரது இறப்பை ஜீரணிக்கவும் முடியாமல் பரிதவித்தார்.. எந்நேரமும் அழுது கொண்டே இருந்தார்.. யாராலும் அம்பிகாவை சமாதானப்படுத்த முடியவில்லை.. ஒருகட்டத்தில் அம்பிகா தற்கொலைக்கும் முயன்றார்.. இந்த விஷயம் சேத்தன்குமாரின் நண்பர் லோகேஷ், என்பவருக்கு தெரிந்து விரைந்து வந்தார்.

திருமணம்
தற்கொலைக்கு முயன்ற அம்பிகாவை உடனடியாக காப்பாற்றினார். அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லி சமாதானப்படுத்தினார்.. இதைதொடர்ந்து சில நாட்களில் லோகேஷ், அம்பிகாவை கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்... இதற்கு அம்பிகாவும் சம்மதம் சொன்னார்.. இருவருமே அவரவர் வீட்டினரிடம் விஷயத்தை சொல்லவும், அவர்களும் இந்த கல்யாணத்துக்கு பச்சை கொடி காட்டினர்.

வாழ்த்துக்கள்
இதையடுத்து, அம்பிகாவுக்கும், லோகேசுக்கும் பெங்களூருவில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.. நண்பரின் மனைவியை தற்கொலையில் இருந்து மீட்டதுடன், மறுமணமும் செய்த லோகேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. இந்த தம்பதிக்கு நட்பு வட்டத்தில் இருந்தும், உறவினர்கள் வட்டத்திலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications