Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் வந்ததும் முதல் விக்கெட் அவுட்.. திப்பு சுல்தான் பற்றி சர்ச்சை புத்தகம் எழுதியவர் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்து இருக்கும் நிலையில், மைசூர் மன்னர் திப்பு சுல்தான் குறித்து சர்ச்சைக்குரிய புத்தகத்தை எழுதிய, மைசூருவில் உள்ள அரசின் ரங்கநாயனா நாடக நிறுவனத்தின் இயக்குநர் அதந்தா சி கரியப்பா, தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்து உள்ளார்.

கர்நாடகா மாநிலம் மைசூருவ்வில் ரங்கநாயனா என்ற பெயரில் அரசால் நடத்தப்படும் நாடக நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக பதவி வகித்து வந்தவர் அதந்தா சி கரியப்பா. இவர் திப்பு நிஜா கனசுகளு (Real Dreams of Tipu) என்ற பெயரில் சர்ச்சைக்குரிய புத்தகம் ஒன்றை எழுதி இருந்தார்.

Controversial Tippu sultan book author Addanda C Cariappa resigned from govt post

அதில், கர்நாடகாவின் கர்ப்பனை கதாப்பாத்திரங்களான சகோதரர்கள் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடாவை உண்மையாக வாழ்ந்தவர்கள் என்று சித்தரித்து இருந்த கரியப்பா, அவர்களை மைசூர் மன்னர் திப்பு சுல்தான் தான் கொலை செய்தார் என்று ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.

அதேபோல் ஏராளமான இந்து மக்களை திப்பு சுல்தான் கொன்று குவித்து இருப்பதாகவும் கரியப்பா தன்னுடைய புத்தகத்தில் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், கரியப்பாவின் புத்தகத்தில் இடம்பெற்று உள்ள இந்த தகவல்கள் உண்மை அல்ல என்றும், கற்பனை எனவும் வரலாற்று ஆய்வாளர்களே குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில் பாஜக அமைச்சராக இருந்த முனிரத்னா, உரி கவுடா, நஞ்சே கவுடா பெயரில் திரைப்படம் ஒன்றையும் தயாரிப்பதாக போஸ்டர் வெளியிட்டார். ஆனால், கவுடா எனப்படும் வொக்காலிகர்களின் புனித தளமான ஆதிசுன்சுனாகிரி மடத்தின் மதகுரு நிர்மலானந்தா சுவாமியே கரியப்பாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

Controversial Tippu sultan book author Addanda C Cariappa resigned from govt post

கர்நாடக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வரலாற்று தலைவர்களுக்கும், கற்பனை பாத்திரங்களுக்கும் மதச்சாயம் பூசப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கரியப்பா ரங்கநாயனா நாடக குழுவின் இயக்குநராக பதவியேற்ற பிறகு வலதுசாரி தலைவர் சக்கரவர்த்தி சுலிபெல்லேவை, நிறுவனத்தின் ஆண்டுவிழாவுக்கு அழைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர்கள், இயக்குநர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அதேபோல் அந்த நிறுவனத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் நடத்தியதற்காகவும் கடும் எதிர்ப்புகளை சந்தித்தார் கரியப்பா. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கண்டன போராட்டங்களில் ஈடுபட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் இவர் பாஜகவுக்கு ஆதரவாக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார்.

Controversial Tippu sultan book author Addanda C Cariappa resigned from govt post

பாஜக எம்.எல்.ஏக்களாக இருந்த கேஜி போப்பையா மற்றும் அப்பாசு ரஞ்சன் ஆகியோரை ஆதரித்து நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் இவர் பிரச்சாரம் செய்தார். ஆனால், இருவருமே தேர்தலில் தோல்வியை தழுவினர். குடகு மாவட்டத்தில் இவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, பாஜகவுக்கு வாக்களிப்பது காசிக்கு யாத்திரை செல்வதை போன்றது.

காங்கிரஸுக்கு வாக்களிப்பது பாலியல் குற்றவாளிகளுக்கும், பாலியல் தொழில் செய்வோருக்கும் வாய்ப்பளிப்பதை போன்றது." என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதற்காக இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்து இருப்பதால் நாடக நிறுவன இயக்குநர் பதவியில் இருந்தே விலகுவதாக அறிவித்து இருக்கிறார் கரியப்பா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+