டுவிஸ்ட்.. “சேம் சைடு கோல்” அடித்த பாஜக ஆதரவாளர்கள்! ஊழல் அதிகம் - கர்நாடகா தேர்தல் கருத்துக்கணிப்பு
பெங்களூரு: சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் கர்நாடகா மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், மாநிலத்தில் ஊழல் அதிகரித்து உள்ளதாக பாஜகவினரே தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு கர்நாடகாவில் நடைபெற்று வரும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. எனவே கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வியூகங்களை ஆளும் பாஜக கையில் எடுத்து கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் இழந்த ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இரு தேசிய கட்சிகளையும் வீழ்த்தி மாநில கட்சியின் ஆட்சியை கர்நாடகாவில் அமைக்க உழைத்து வருகிறது.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மாநில அரசுக்கு எதிரான ஊழல், கமிஷன் பிரச்சனைகள், ஹிஜாப், ஹலால் பிரச்சனைகள், பாஜக உட்கட்சி பூசல், லிங்காயத்து மக்களின் எதிர்ப்பு, மதவாத கலவரங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், இடஒதுக்கீடு சர்ச்சை போன்றவை பாஜகவுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றன.
இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு இருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி பெற்று ஆட்சி அமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. இந்த நிலையில் என்டிடிவி - சிஎஸ்டிஎஸ் இணைந்து கர்நாடக மாநில தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளன. கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் ஊழல் குறித்த கேள்வியும் இடம்பெற்று உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 51 சதவீதம் வாக்காளர்கள் கர்நாடக மாநிலத்தில் ஊழல் அதிகரித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர் ஊழல் அதே நிலையில் தொடர்வதாக கூறி இருக்கின்றனர். குறிப்பிடத்தக்க வகையில் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 41 சதவீத பாஜக ஆதரவாளர்களே கர்நாடகவாவில் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழல் ஊழல் பெருகி இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். பாஜகவினரே பாஜக ஆட்சியில் ஊழல் பெருகி இருப்பதாக தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications