டுவிஸ்ட்.. “சேம் சைடு கோல்” அடித்த பாஜக ஆதரவாளர்கள்! ஊழல் அதிகம் - கர்நாடகா தேர்தல் கருத்துக்கணிப்பு
பெங்களூரு: சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் கர்நாடகா மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், மாநிலத்தில் ஊழல் அதிகரித்து உள்ளதாக பாஜகவினரே தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு கர்நாடகாவில் நடைபெற்று வரும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. எனவே கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வியூகங்களை ஆளும் பாஜக கையில் எடுத்து கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் இழந்த ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இரு தேசிய கட்சிகளையும் வீழ்த்தி மாநில கட்சியின் ஆட்சியை கர்நாடகாவில் அமைக்க உழைத்து வருகிறது.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மாநில அரசுக்கு எதிரான ஊழல், கமிஷன் பிரச்சனைகள், ஹிஜாப், ஹலால் பிரச்சனைகள், பாஜக உட்கட்சி பூசல், லிங்காயத்து மக்களின் எதிர்ப்பு, மதவாத கலவரங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், இடஒதுக்கீடு சர்ச்சை போன்றவை பாஜகவுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றன.
இது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு இருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி பெற்று ஆட்சி அமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. இந்த நிலையில் என்டிடிவி - சிஎஸ்டிஎஸ் இணைந்து கர்நாடக மாநில தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளன. கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் ஊழல் குறித்த கேள்வியும் இடம்பெற்று உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 51 சதவீதம் வாக்காளர்கள் கர்நாடக மாநிலத்தில் ஊழல் அதிகரித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 35 சதவீதம் பேர் ஊழல் அதே நிலையில் தொடர்வதாக கூறி இருக்கின்றனர். குறிப்பிடத்தக்க வகையில் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 41 சதவீத பாஜக ஆதரவாளர்களே கர்நாடகவாவில் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ஊழல் ஊழல் பெருகி இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். பாஜகவினரே பாஜக ஆட்சியில் ஊழல் பெருகி இருப்பதாக தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications