காய்ச்சல், சளி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்.. கொரோனா பரவலால் கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறை நாளையுடன் முடிவடைகிறது. அதன்பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பள்ளிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கர்நாடகா சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடகா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆணையர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛கர்நாடகாவில் கொரோனா பரவல் மற்றும் ஜூன் மாதம் பள்ளி திறப்பதையொட்டி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

* பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு சளி,காய்ச்சல், இருமல் மற்றும் கொரோனாவுக்கான பிற அறிகுறிகள் இருப்பின் பள்ளிகளுக்கு அனுப்பாமல் டாக்டரை அணுகி சிகிச்சை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கொரோனாவுக்கான அறிகுறிகள் அனைத்தும் சரியாகி முழுமையாக குணமான பிறகே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வந்தால் உடனடியாக பெற்றோரை தொடர்பு கொண்டு வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* மாணவ-மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பள்ளியில் பணியாற்றியும் பிற ஊழியர்களுக்கும் சளி, காய்ச்சல், இருமல் இருப்பினும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிக்காட்டு நடைமுறைகளை பள்ளிகளில் முறையாக பின்பற்ற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications