Dharmasthala: தர்மஸ்தலாவில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 80 உடல்கள்! 'ஸ்பாட் 13ஐ' டார்கெட் செய்த அதிகாரிகள்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் பல உடல்களை புதைக்க தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக முன்னாள் தூய்மை பணியாளர் கூறியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ஒரே இடத்தில் 70-80 உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பணியாளர் கூறிய நிலையில், அந்த பகுதியில் தோண்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தர்மஸ்தலாவில், கடந்த இருபது ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கூட்டு படுகொலைகள் நடந்ததாகவும், இவ்வாறு கொல்லப்பட்ட உடல்களை தான் புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் முன்னாள் சுகாதாரப் பணியாளர் கூறியிருந்தார். பணியாளரின் புகாரையடுத்து கடந்த மாதம், கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

புகார் அளித்தவர் கூறுகையில், தான் கடந்த 1995 முதல் 2014 வரை தர்மஸ்தலாவில் பணிபுரிந்ததாகவும், இந்த காலத்தில் பல உடல்களைப் புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் ஒரு நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தியா டுடேவிடம் பேட்டியளித்த அவர், நேத்ராவதி நதிக்கு அருகில் உள்ள 'ஸ்பாட் 13'-ல் சுமார் 80 உடல்களை புதைத்ததாக தெரிவித்தார். சடலங்களை புதைக்க கோயில் நிர்வாகத்திடமிருந்து நேரடியாக உத்தரவுகள் வந்ததாகவும், உடல்களை வனப்பகுதிகளிலோ அல்லது பழைய சாலைகளிலோ புதைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார்.
அகழ்வாராய்ச்சி மற்றும் தேடுதல் நடவடிக்கைகள்
இதனையடுத்து கனமழை பெய்தபோதிலும், ஸ்பாட் 13-ல் அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர். தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு 18 அடி ஆழம் வரை தோண்டியுள்ளதாகவும், நிலம் ஊடுருவும் ரேடாரைப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில புதைப்பு இடங்கள் மறைந்திருக்கலாம் என்று தகவலளித்தவர் கருதினார். "நாங்கள் உடல்களை ஆழமாக புதைத்தோம். மற்ற உடல்கள் மலைகளில் புதைக்கப்பட்டன," என்று அவர் கூறினார். பகல் நேரத்தில் உள்ளூர்வாசிகள் பார்த்தும் தடுக்கவோ கேள்வி கேட்கவோ இல்லை என்றும் அவர் கூறினார்.
சாட்சிகள் மற்றும் புகார்தாரர்களின் தகவல்கள்
சாட்சிகள் மற்றும் புகார்தாரர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு குழு பல இடங்களை ஆய்வு செய்தது. ஸ்பாட் 6, 11 மற்றும் 14 இல் சில எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது டிஎன்ஏ மற்றும் தடயவியல் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications