Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dharmasthala: தர்மஸ்தலாவில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 80 உடல்கள்! 'ஸ்பாட் 13ஐ' டார்கெட் செய்த அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் பல உடல்களை புதைக்க தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக முன்னாள் தூய்மை பணியாளர் கூறியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ஒரே இடத்தில் 70-80 உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பணியாளர் கூறிய நிலையில், அந்த பகுதியில் தோண்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தர்மஸ்தலாவில், கடந்த இருபது ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கூட்டு படுகொலைகள் நடந்ததாகவும், இவ்வாறு கொல்லப்பட்ட உடல்களை தான் புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் முன்னாள் சுகாதாரப் பணியாளர் கூறியிருந்தார். பணியாளரின் புகாரையடுத்து கடந்த மாதம், கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

Dharmasthala Karnataka temple

புகார் அளித்தவர் கூறுகையில், தான் கடந்த 1995 முதல் 2014 வரை தர்மஸ்தலாவில் பணிபுரிந்ததாகவும், இந்த காலத்தில் பல உடல்களைப் புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் ஒரு நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தியா டுடேவிடம் பேட்டியளித்த அவர், நேத்ராவதி நதிக்கு அருகில் உள்ள 'ஸ்பாட் 13'-ல் சுமார் 80 உடல்களை புதைத்ததாக தெரிவித்தார். சடலங்களை புதைக்க கோயில் நிர்வாகத்திடமிருந்து நேரடியாக உத்தரவுகள் வந்ததாகவும், உடல்களை வனப்பகுதிகளிலோ அல்லது பழைய சாலைகளிலோ புதைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

அகழ்வாராய்ச்சி மற்றும் தேடுதல் நடவடிக்கைகள்

இதனையடுத்து கனமழை பெய்தபோதிலும், ஸ்பாட் 13-ல் அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர். தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். சிறப்பு புலனாய்வு குழு 18 அடி ஆழம் வரை தோண்டியுள்ளதாகவும், நிலம் ஊடுருவும் ரேடாரைப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில புதைப்பு இடங்கள் மறைந்திருக்கலாம் என்று தகவலளித்தவர் கருதினார். "நாங்கள் உடல்களை ஆழமாக புதைத்தோம். மற்ற உடல்கள் மலைகளில் புதைக்கப்பட்டன," என்று அவர் கூறினார். பகல் நேரத்தில் உள்ளூர்வாசிகள் பார்த்தும் தடுக்கவோ கேள்வி கேட்கவோ இல்லை என்றும் அவர் கூறினார்.

சாட்சிகள் மற்றும் புகார்தாரர்களின் தகவல்கள்

சாட்சிகள் மற்றும் புகார்தாரர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு குழு பல இடங்களை ஆய்வு செய்தது. ஸ்பாட் 6, 11 மற்றும் 14 இல் சில எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது டிஎன்ஏ மற்றும் தடயவியல் பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+