பெண் எம்பியின் இடுப்பில் கை வைத்தாரா கர்நாடக முதல்வர்.. வீடியோவால் திடீர் பரபரப்பு!
பெங்களூர்: நடிகையும் மாண்டியா சுயேச்சை எம்பியுமான சுமலதாவின் இடுப்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கை வைத்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
நேற்று கர்நாடகாவில் இருக்கும் மாண்டியா மாவட்டத்தில் காவிரி நீர் திறப்பு விழா நடந்தது. பிஎஸ் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.
இதற்காக ஸ்ரீரங்காபாட்னா தாலுக்காவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாண்டியா பாஜக நிர்வாகிகள், மைசூர், மாண்டியா எம்எல்ஏக்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

யார் வந்தனர்
இந்த அணை திறப்பு விழாவிற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வந்து இருந்தார். அதேபோல் மாண்டியா தொகுதியை சேர்ந்த சுயேச்சை எம்பி நடிகை சுமலதா வருகை புரிந்து இருந்தார். இவர் இருவரும் சேர்ந்து அங்கு காவிரி நேரில் பூக்களை தூவி, பின் அணையை திறந்தனர். இந்த விழாவில் நடந்த சம்பவம்தான் எடியூரப்பாவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

இடுப்பு புகார்
இந்த விழாவில் சுமலதாவின் இடுப்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கை வைத்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நீருக்கு பூ போடும் போது சுமலதா இடுப்பில் எடியூரப்பா கை வைப்பது போல காட்சிகள் பதிவாகி உள்ளது. இதை சுமலதா கோபத்தில் எடியூரப்பாவிடம் பேசுவது போலவும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

விவாதம்
உண்மையில் சுமலதா கோபத்தில் பேசினாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த நிகழ்விற்கு பின் உடனே எடியூரப்பா சுமலதா இடுப்பில் இருந்து கையை எடுத்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது . கர்நாடகா முழுக்க இந்த வீடியோ இணையம் முழுக்க விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எடியூராப்பாவிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர் .

யார் இவர்
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுமலதா. இவர் பிரபல நடிகர் அம்பரீஷ் மனைவி. கர்நாடகாவில் இருக்கும் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக நின்று இவர் நாடாளுமன்றத்திற்கு எம்பியாக தேர்வானார். நாடாளுமன்ற தேர்தலில் இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications