கர்நாடகா ஹைகோர்ட் தீர்ப்பு- சித்தராமையா ராஜினாமா செய்யமாட்டார்..'இலவு காத்த கிளி'யான டிகே சிவகுமார்
பெங்களூர்: முடா வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி அளித்தது செல்லும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் இந்த தீர்ப்புக்காக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்யமாட்டார் என துணை முதல்வரும் முதல்வர் பதவியை நோக்கி இலவு காத்த கிளியாக காத்திருப்பவருமான டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான முடா, சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. சித்தராமையாவின் மனைவி நிலத்தை முடா ஆக்கிரமித்தது; இதற்கு நட்ட ஈடாகவே 14 வீட்டு மனைகளை முடா ஒதுக்கியது எனவும் கூறப்படுகிறது.

ஆனால் முடாவின் வீட்டு மனை ஒதுக்கீடு சட்டவிரோதமானது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் சித்தராமையா மீது வழக்கு தொடரவும் சமூக ஆர்வலர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்தார். இதனடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் ஆளுநர் கொடுத்த அனுமதிக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ஆளுநர் கெலாட் அனுமதி கொடுத்தது செல்லும் எனத் தீர்ப்பளித்து சித்தராமையா மனுவை டிஸ்மிஸ் செய்தது. இதனால் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா பதவி விலகினார், துணை முதல்வர் டிகே சிவகுமார் புதிய முதல்வராகக் கூடும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறியிருப்பதாவது: சித்தராமையாவுக்கு எதிராக மிகப் பெரிய சதி நடந்து வருகிறது. முடா ஒதுக்கீட்டில் சித்தராமையா மீது தவறு இல்லை. வழக்கு விசாரணையில் உண்மை வெளியே வரத்தான் போகிறது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை. ஆனால் சித்தராமையா இதற்காக ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த நாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக இப்படித்தான் பாஜக சதி செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் அனைவருமே சித்தராமையா பக்கமே நிற்கிறோம். அவருக்கு ஆதரவாகவே காங்கிரஸ் நிற்கிறது. அன்று என்னை கூட சிறைக்கு அனுப்பியதும் பாஜகதான். அதே யுக்தியைத்தான் இப்போதும் பாஜக கையாள்கிறது. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications