ஆஸ்பத்திரிக்குள் நர்சுகளுடன் பதுங்கியிருந்த டாக்டர்.. கதவை உடைத்து நுழைந்த போலீஸ்.. காரணம் தெரியுமா?
பெங்களூர்: கொரோனா வைரஸ் நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் நர்சுகள் மருத்துவமனைக்கு உள்ளேயே பூட்டிக்கொண்டு இருந்ததும், அதை கண்டுபிடித்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று அவர்களை தூக்கி சென்று தனிமைப்படுத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூரில்தான், இப்படி ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெற்கு பெங்களூரில் உள்ளது பொம்மனஹள்ளி. இந்த ஏரியாவுக்குள் அமைந்துள்ளது ஹொங்கசந்திரா என்ற பகுதி. இங்கு வேணு மருத்துவமனை என்ற பெயரில் டாக்டர் வேணுகோபால் என்பவர் மருத்துவமனை நடத்தி வந்தார்.
இங்கே நர்சுகள் சிலரும் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பாக ஹொங்கசந்திரா பகுதியைச் சேர்ந்த 54 வயதாகும் ஒரு கட்டிட தொழிலாளி, சுவாசப் பிரச்சினை தொடர்பாக இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த கட்டிட தொழிலாளியாகும்.
டாக்டர் வேணுகோபால் அவருக்கு சிகிச்சை அளித்து உள்ளார். ஆனால் குணமடைந்தபாடில்லை. எனவே ஜெயதேவா இருதய சிகிச்சை மருத்துவ மனைக்கு அந்த நோயாளியை அனுப்பி வைத்துள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இது இதயநோய் பாதிப்பு இல்லை என்பதை கண்டறிந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கட்டிட தொழிலாளியை பரிசோதித்த டாக்டர்கள், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். மேலும் அவரை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொழிலாளிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை உடனடியாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த தகவல் தெரிந்ததும் டாக்டர் வேணுகோபால் மற்றும் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய நர்சுகள், மருத்துவமனையை பூட்டிக்கொண்டு உள்ளேயே தங்கி விட்டனர். அங்கே நோயாளிகள் தங்கி சிகிச்சை அளிக்க தேவையான வசதி இருப்பதால் அதை பயன்படுத்திக் கொண்டனர்.
கொரோனா வைரஸ் நோயாளிக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தால் தங்களைத் தனிமைப் படுத்தி விடுவார்கள் என்ற பயத்தால் இவ்வாறு அவர்கள் செய்துள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் சிவமூர்த்தி உத்தரவின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று கதவை உடைத்து டாக்டர் மற்றும் நர்சுகளை, சிவி ராமன் நகர் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.
இந்த கட்டிட தொழிலாளி வசித்த பகுதி மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியாகும். ஏழை, எளியவர்கள், சிறு சிறு வீடுகளில் நெருக்கமாக வாழும் பகுதியாகும். எனவே அவர் யார் யாரை தொடர்பு கொண்டார் என்று கேட்டறிந்து அவர்களை ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளது காவல்துறை. இதுவரை 15 தொடர்புகள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளனர்.
ஒரு மருத்துவராக இருந்தும், உண்மையை மறைத்ததற்காக வேணு மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் கலெக்டர் அறிவித்துள்ளார். டாக்டர் மற்றும் நர்சுகள், அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் தனிமைப்படுத்தலுக்கு அஞ்சி ஆஸ்பத்திரியை பூட்டிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொம்மனஹள்ளி பகுதிக்குள் செல்லும் வாகனங்கள் மற்றும் வெளியேறும் வாகனங்கள் தீவிர வாகனத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.
கடந்த 3 நாட்களாக பெங்களூரில் எங்கேயுமே கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று ஹொங்கசந்திரா கட்டிட தொழிலாளி மற்றும் சிவாஜிநகரை சேர்ந்த நர்சு ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications