காங். சின்னமாம்! 'கை' காட்டி வாகனத்தை நிறுத்தக்கூடாது.. பெங்களூருக்கு போலீசுக்கு நூதன உத்தரவு
பெங்களூரு: காங்கிரஸ் சின்னத்தை குறிப்பதால் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது என தேர்தல் பணியில் ஈடுபடும் பெங்களூரு போலீசாருக்கு நூதன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 28 எம்பி தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு போலீசாருக்கு தேர்தல் நாளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்று பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என 5 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் தயாரித்துள்ளது. அந்த புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு சாவடிகளை சுற்றி வேட்பாளர்களின் சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்பது விதியாக உள்ளது. அதன்படி காங்கிரசின் சின்னமாக 'கை' இருப்பதால், அந்த சின்னத்தை பயன்படுத்தக்கூடாது.
இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் பொதுவாக போலீசார் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்துவார்கள். இப்படி செய்வதால் அது காங்கிரசின் சின்னத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் காங்கிரஸ் சின்னத்தை குறிக்கும் வகையில் உள்ளங் 'கை' காட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நூதனமான இந்த தேர்தல் விதிமுறை உத்தரவு பெங்களூரு போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications