இது ஓகேவா..? மும்பையிலிருந்து சபாநாயகருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் வந்த எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம்
பெங்களூர்: காங்கிரசின் 11 எம்எல்ஏக்கள் மற்றும் மஜதவின் 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 14 எம்எல்ஏக்கள் வழங்கிய ராஜினாமா கடிதங்களில் 9 பேரின் கடிதங்கள் செல்லாது என கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் நேற்று அறிவித்தார்.
இதையடுத்து மும்பை ஓட்டலில் உள்ள எம்எல்ஏக்களில் 8 பேர் ஸ்பீட் போஸ்ட் மூலம் மீண்டும், சபாநாயகருக்கு ராஜினாமா கடிதங்களை இன்று அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், நேரில் வந்து ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும் என்பதே சபாநாயகர் பரிந்துரை என்பதால், இந்த கடிதங்களும் ஏற்கப்படுமா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் கூறுகையில், "எதிர்க்கட்சிக்கு ஜனநாயகத்தில் இடம் கொடுக்கப்பட வேண்டும். எம்.எல்.ஏ.க்களை சந்திக்க எங்கள் அமைச்சர் செல்லும்போது, அவரை அனுமதிக்கப்படவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை" என்றார்.
அதிகாரத்தை கைப்பற்ற கர்நாடகாவில் ஜனநாயகத்தை அகற்ற பாஜக முயற்சிக்கிறது என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார்.
"மகாராஷ்டிராவில் ராணுவச் சட்டம் உள்ளது. கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் ஹோட்டலுக்குச் சென்றார், ஏற்கனவே அவர் அறை முன்பதிவு செய்தார் ... அவர் காரில் இருந்து இறங்கியபோதே, போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். நீங்கள் ஒரு அமைச்சரை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும்?" என்றார் அவர்.
அரசியல் நெருக்கடியைத் தீர்க்க, காங்கிரசுக்கு உதவ கர்நாடகாவிற்கு வந்து உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கூறுகையில், "ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் மஜத இன்று தர்ணா நடத்தும்" என்றார்.
-
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications