கரையில் மட்டுமல்ல,இனி கடலிலும் நோ குற்றம்.. ஸ்கூபா டைவிங் பயிற்சியில் தமிழ்நாடு போலீஸ்
சென்னை: தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் முதல்முறையாக ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்றனர். இது தமிழ்நாடு காவல் துறையை நிச்சயம் வலுப்படுத்தும்.
Recommended Video
இந்திய வரலாற்றிலேயே கருப்பு நாள் என்றால் அது நவம்பர் 26ஆம் தேதி தான். கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26இல் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் வழியே மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் பல காவலர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். மேலும், 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கர்நாடக போலீசார்
இந்தத் தாக்குதலில் அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைத்து பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் தான் கடலோர பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து மாநிலத்திலும் கடலோர பாதுகாப்புப் படை மத்திய அரசு ஏற்படுத்தியது. அப்போது கர்நாடக போலீசார் அடுத்த லெவலுக்கே சென்றனர்.

ஸ்கூபா டைவிங் பயிற்சி
கர்நாடகா போலீசாருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சியை அம்மாநில அரசு அறிவித்தது. இந்தியாவிலேயே மாநில போலீசாருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி அளித்த முதல் மாநிலம் கர்நாடகா தான். அங்குக் கடந்த 2013ஆம் ஆண்டு முதலே போலீசாருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு போலீஸ்
அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போலீசாரும் ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், முதல்முறையாகத் தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகளுக்கும் ஸ்கூபா டைவிங் பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்டது.

தீவிர பயிற்சி
முதலில் தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்கூபா டைவிங் குறித்தும் முக்கிய விஷயங்கள் குறித்தும் செமினார் நடத்தப்பட்டது. அதன் பிறகு நீச்சல் குளம் ஒன்றில் வீரர்களுக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாக நீர்ப்பிடிப்பு பகுதியிலும் போலீசார் ஸ்கூபா டைவிங் மேற்கொண்டனர்.

மகளிர் போலீஸ்
மேலும், இதில் ஆண் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி தமிழ்நாடு மகளிர் போலீஸ் அதிகாரிகளும் இந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் நீச்சல் குளம், வெளியே நீர்ப்பிடிப்பு பகுதி என இரண்டிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ரோயிங் பயிற்சி
இது தவிர அங்கு நதியில் ரோயிங் பயிற்சியையும் (துடுப்பு படகு) தமிழ்நாடு போலீஸ் மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் தமிழ்நாடு போலீசார் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஸ்கூபா டைவிங் , ரோயிங் எனத் தமிழ்நாடு போலீசார் பயிற்சி பெறும் படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications