"சூறைக்காற்று + ரெட் அலர்ட்.." பெங்களூரில் அடுத்த ஒரு வாரம் கனமழை வெளுக்கும்.. கர்நாடகாவுக்கு அலர்ட்
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏற்கனவே பருவமழை ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே கர்நாடகாவில் அடுத்து சில நாட்கள் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், இன்றும் நாளையும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யலாம் என்பதால் கர்நாடகாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மே மாதம் வெயில் தான் அதிகமாக இருக்கும். கத்திரி வெயில் காலத்தில் சூரிய வெப்பம் நம்மை படுத்தி எடுத்துவிடும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக மே மாதம் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மழை கொட்டி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் கூட மழை தொடர்ந்து பெய்தே வருகிறது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை
இதற்கிடையே வரும் மே 31ம் தேதி வரை பெங்களூரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இன்றும் நாளையும் கர்நாடகாவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கியவுடன் கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கோவா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மழை ஆரம்பித்துவிட்டது.
பொதுவாக இந்த பருவமழை சீசனில் பெங்களூரில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை தொடரும்
மேற்கு மத்திய மற்றும் கிழக்கு மத்திய அரேபியக் கடலின் சில பகுதிகளிலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும், முழு கோவாவிலும், மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும், மேற்கு மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளிலும், மிசோரமின் சில பகுதிகளிலும், மணிப்பூர் மற்றும் நாகாலாந்தின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாகப் பெங்களூரில் உள்ள இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலோர கர்நாடகாவில் இன்று தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் சில இடங்களில் (மணிக்கு 40-50 கிமீ) பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் மணிக்கு 40-50 கிமீ பலத்த காற்றுடன் கூடிய மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர கர்நாடகா
நாளைய தினமும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் (மணிக்கு 40-50 கிமீ) பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. உடுப்பி மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் (மணிக்கு 40-50 கிமீ) பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூர் வானிலை
தெற்கு உள் கர்நாடகாவை பொறுத்தவரை இன்று சிக்கமகளூரு, குடகு மற்றும் சிவமொக்கா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் (மணிக்கு 50-60 கி.மீ) பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சாமராஜநகர், ஹாசன், மண்டியா மற்றும் மைசூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் பல்லாம், பெங்களூர் (ரூரல்), பெங்களூர் (அர்பன்), சிக்கபல்லபுரா, சித்ரதுர்கா, தாவணகெரே, கோலார், ராமநகரம், தும்கூர் மற்றும் விஜயநகர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது












Click it and Unblock the Notifications