பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது
பெங்களூர்: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் பிறப்பித்து இருந்தது.
இருபினும் காற்றின் திசை மாறியதால் இன்று அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

மழை
ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று இரவு முதல் மழையின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று இரவு நல்ல மழை பெய்த நிலையில், இன்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

ஆரஞ்சு அலர்ட்
முன்னதாக, பெங்களூருவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மழை அதிகம்
அக்டோபர் 15 முதல் 21ம் தேதிக்குள் கர்நாடக மாநிலத்தில் வழக்கமான மழை அளவை விட 172 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் அவதி
மாலை நேரத்தில் பெங்களூருவில் பெய்துவரும் மழை காரணமாக, கல்லூரிகள், அலுவலகங்களிலிருந்து வீடு திரும்ப கூடியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் குளுகுளு வானிலை நிலவி வருகிறது.

5 நாட்கள் மழை
கிழக்கு மைய அரேபிய கடலில் இருந்து தெற்கு சத்தீஸ்கர் வரை கோவா, வடக்கு உள்கர்நாடகா மற்றும் தெலுங்கானா வரையிலான குறைந்த அழுத்தப் பகுதி நீடிக்கிறது. கர்நாடக மாநிலம் ஒட்டுமொத்தமாக அடுத்த ஐந்து நாட்களில் (அக்டோபர் 25 வரை) மிதமான முதல் கனமழை வரை பரவலாகப் பெற வாய்ப்புள்ளது. இது மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளத்திற்கு வழிவகுக்கும்.

அதிகாரிகளுக்கு உத்தரவு
"கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அனைத்து துறைகள் / அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது" என்று கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய இயக்குனர் சீனிவாஸ் ரெட்டி கூறினார்.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications