ஜஸ்ட் 5 ஃபார்முலா.. டோட்டல் பெங்களூர் மக்களின் தாகம் தீர்த்த தமிழ் ஐஏஎஸ் அதிகாரி! சாதித்தது எப்படி?
பெங்களூர்: பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு அகற்றல் வாரியத்தின் (BWSSB) சேர்மன் பதவியை வகிப்பவர் தமிழகத்தின் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் ஆகும். பெங்களூர் நகரம் குடிநீர் பிரச்சினையில் தத்தளித்தபோது, 5 ஃபார்முலாக்களை கொண்டுவந்து தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைத்தார். இந்த அதிரடி நடவடிக்கையை, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோரும் பாராட்டினர். ஆங்கில ஊடகங்கள் இவரை water warrior என்று அடைமொழி வைத்து அழைத்தன.

தமிழ் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பெங்களூர் நகரம் மாதிரி ஒரு காஸ்மோபாலிடன் சிட்டியில் சிறப்பாக பணியாற்றியதற்காக புகழப்படுவதை அறிந்ததும், அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதோடு, அந்த ஃபார்முலா என்ன என்று கேட்டறிய முடிவு செய்தோம். ஏனெனில் அது பெங்களூருக்கு மட்டுமல்ல பல நகரங்களுக்கும் உதவும் என நம்பினோம். ஒன்இந்தியா தமிழ் எடிட்டர் வீரக்குமரன், பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரிய தலைமை அலுவலகத்தில் ராம்பிரசாத் மனோகரை சந்தித்து நிகழ்த்திய நேர்காணல் இந்த வீடியோவில் உள்ளது..
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க எடுத்த 5 ஃபார்முலாக்கள் என்னென்ன, சென்சாரை சின்டெக்ஸ் டேங்கரில் பொருத்தி அதன் அளவை கண்காணித்து ஏழை மக்களுக்கு உடனுக்குடன் தண்ணீர் வழங்கியது எப்படி, தண்ணீர் லாரிகளில் ஜிபிஎஸ் பொருத்தி அவற்றை கண்காணித்து சரியான நேரத்தில் மக்களுக்கு குடிநீர் சென்று சேருவதை உறுதி செய்தது எப்படி, ஹோட்டல்களில் தண்ணீர் வீணாவதை
தடுக்க என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தலாம் என்பது உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களையும், தனது ஏழ்மையான குடும்ப பின்னணியையும் இந்த வீடியோவில் விளக்கியுள்ளார் ராம்பிரசாத் ஐஏஎஸ். காணத்தவறாதீர்கள்.
குறிப்பாக, ஹோட்டல்களில் கை கழுவும் இடங்களில் தானியங்கி கை கழுவும் குழாய்களால் வீணாகும் பல லட்சம் லிட்டர் தண்ணீராக இருக்கட்டும் நமது வீடுகளில் கை கழுவும் குழாய்களில் வீணாகும் நீராக இருக்கட்டும், 40 ரூபாய் மதிப்புள்ள ஒரு கருவி எப்படி அந்த தண்ணீரை சேமிக்க உதவும் என்பதையும் அவர் இந்த வீடியோவில் தெளிவாக விளக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications