தினம், தினம் கடும் கஷ்டப்படுகிறேன்.. வெளியே சொல்ல முடியல.. குமுறும் கர்நாடக முதல்வர் குமாரசாமி
பெங்களூர்: தினம் தினம், நான் படும் அவஸ்தையை வெளியே சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மஜத கட்சியின் குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், கூட்டணிக்குள் அவ்வப்போது குந்தகம் ஏற்பட்டு வருகிறது. இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களும் ஒருங்கிணைந்து செல்வதில்லை என்று கூறப்படுகிறது.

விஷம்
சில மாதங்களுக்கு முன்பாக பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கண்ணீர் விட்டு கதறி அழுதார் குமாரசாமி. கூட்டணி என்ற விஷத்தை தன்னை அருந்த வைத்து விட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

தேர்தல் தோல்வி
இந்த நிலையில், லோக்சபா தேர்தலிலும் இதே கூட்டணி களம் கண்டது. ஆனால் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியை மட்டுமே காங்கிரஸ் மற்றும் மஜத வெற்றி கண்டன. 25 தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சுமலதா ஒரு இடத்தையும் கைப்பற்றினர்.

அதிகாரிகள்
இந்த நிலையில், பெங்களூர் அடுத்த சென்னப்பட்டினா, பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குமாரசாமி கூறியதை பாருங்கள்: நான் மக்களுக்கு வழங்கிய, வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். என்னால் நான் படும் கஷ்டங்களை வெளியே சொல்ல முடியவில்லை. தினம்தினம் நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டுதான் பணியாற்றுகிறேன். ஆனால் அதை வெளியே சொன்னால், அரசு ஆட்டம் கண்டு விட்டது என்று, அதிகாரிகள் அலட்சியமாக பணியாற்றுவார்கள் என்பதால், நான் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஆபத்து இல்லை
மேலும் அரசை கலைப்பதற்காக, தனது கட்சி எம்எல்ஏ ஒருவருக்கு பத்து கோடி ரூபாய் வரை பாஜக தரப்பில் இருந்து விலை பேசப்பட்டதாகவும், பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் குமாரசாமி. கூட்டணி தொடர்பாக குமாரசாமி தெரிவித்துள்ள கருத்து பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா பெங்களூரில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், கூட்டணி அரசுக்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பாஜக அது போன்ற முயற்சிகளை எடுத்தாலும் அது பலன் கொடுக்காது என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தனக்கு நெருக்கடி தருவதாக புலம்புவதுதான் குமாரசாமி வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications