நலமாக இருக்கிறேன்.. மக்கள் அச்சப்பட வேண்டாம்.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை
பெங்களூர்: கொரோனா அச்சம் காரணமாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா வீட்டு தனிமையில் உள்ளார். அங்கிருந்தபடியே பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.
தான், ஆரோக்கியமாக இருப்பதாகவும், மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
"எனது அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்களுக்கு கொரோனா உள்ளதால், எனது அரசு இல்லத்திலிருந்து (காவிரி இல்லம்) சில நாட்கள் பணியாற்ற முடிவு செய்துள்ளேன் '' என்று முதல்வர் கூறினார்.

வீட்டிலிருந்து பணி
வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அரசு கடமைகளை நிறைவேற்றுவதாகவும், அதிகாரிகள் சுமூகமாக செயல்படுவதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவையான வழிமுறைகளை வழங்குவதாகவும் எடியூரப்பா கூறினார்.

மக்கள் உஷார்
மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும், அப்போதுதான் நோய் பரவலை குறைக்க முடியும் என்றும் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், பிபிஎம்பி அதிகாரிகள் உடனடியாக முதல்வரின் இல்லமான காவேரியை சுத்திகரித்தனர். கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன.

எடியூரப்பா நலமோடு உள்ளார்
முதல்வரின் அரசியல் செயலாளர் எம்.பி. ரேணுகாச்சார்யா, அளித்த பேட்டியில், "முதல்வர் ஆரோக்கியமாக இருக்கிறார், எந்த பிரச்சனையும் இல்லை. அவர் சில நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க முடிவு செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.

பெங்களூரில் அதிக பாதிப்பு
வியாழக்கிழமையான நேற்று பெங்களூரில் 1,373 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன, இது நகரத்தின் மிகப்பெரிய ஒரு நாளைய பதிவாகும். நகரின் மொத்த கொரோனா நோயாளி எண்ணிக்கை 13,882. எனவே, பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மையமாக மாற்றப்படும் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications