"சாவர்க்கர் போஸ்டர்களை தொட்டால் கையை வெட்டுவோம்" பகிரங்கமாக மிரட்டும் கர்நாடக இந்து சேனா தலைவர்
பெங்களூர்: "சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரின் போஸ்டர்களை முஸ்லிம்கள் யாரேனும் தொட்டால் அவர்களின் கையை வெட்டுவோம்" என்று இந்து சேனா அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, ஆர்எஸ்எஸ் நிறுவனர் சாவர்க்கரின் பெயரை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றன. சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது என்றும், அவரது பெயரை முந்தைய ஆட்சியாளர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டனர் எனவும் பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
ஆனால், பிரிட்டிஷாரிடம் பல முறை மன்னிப்புக் கேட்டு சிறையில் இருந்து வெளியே வந்தவர் சாவர்க்கர் என்றும், காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

நேரு படம் இல்லை
இதனிடையே, கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களுடன் கர்நாடகா அரசு ஒரு பத்திரிகை விளம்பரத்தை வெளியிட்டது. அதில், சாவர்க்கரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.

சாவர்க்கர் போஸ்டர்கள் கிழிப்பு
இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கரின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இதன் விளைவாக பல்வேறு இடங்களில் மோதல் சம்பவங்களும் அரங்கேறின. இந்த சூழலில், வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, கர்நாடகா முழுவதும் சாவர்க்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் போஸ்டர்கள் வைக்கப்படும் என இந்து அமைப்புகள் நேற்று அறிவித்தன.

பிரமோத் முத்தாலிக்
இந்நிலையில், இதுதொடர்பாக இந்து சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பெங்களூருவில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், "சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கரின் பங்களிப்பையும், அவரது பெருமையையும் நாடு முழுவதும் பரப்புவோம். அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல. பிரிட்டாஷாருக்கு மட்டுமே எதிரானவர்.

வெட்டி எறிவதாக எச்சரிக்கை
இந்த முறை நாங்கள் வைக்கும் சாவர்க்கரின் போஸ்டர்களை எந்த முஸ்லிம் நபரோ அல்லது காங்கிரஸை சேர்ந்தவரோ தொட்டால் அவர்கள் கையை நாங்கள் வெட்டி எறிவோம். இதனை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்" எனக் கூறினார். பிரமோத் முத்தாலிக்கின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications