கொரோனா: பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து இளவரசி டிஸ்சார்ஜ்
பெங்களூரு: கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் உறவினர் இளவரசி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகால தண்டனையை 3 பேரும் நிறைவு செய்துள்ளனர்.

சிறையில் இருந்த போது சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்ததால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில் பெங்களூருவில் சொகுசு விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார் சசிகலா. இதனிடையே சசிகலாவுடன் சிறையில் இருந்ததால் இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இளவரசியும் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார். பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் இளவரசி, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறையில் நடைமுறைகள் நிறைவடைந்ததும் அவரும் விடுதலை செய்யப்படுவார்.












Click it and Unblock the Notifications