நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே
பெங்களூர்: பெங்களூரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதலியுடன், காதலன் சண்டையிட்டார். சண்டை முற்றவே ஆக்ரோஷான காதலன், தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் புர்வா லெப்சா (வயது 25). இவருக்கும் சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த 22 வயது நிரம்பிய அதி ஹங்மா சுபா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இருவரும் நட்பாக பழகினர்.

பிறகு இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் உருகி உருகி காதலித்தனர். பல்வேறு இடங்களில் அவர்கள் சேர்ந்து வசித்து தனித்தனியாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தான் இவர்கள் 2 பேரும் ஜோடியாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெங்களூரு சென்றனர்.
பெங்களூரில் இருவரும் தொட்டனஹள்ளியில் வீடு ஒன்றை எடுத்து ஜோடியாக வசிக்க தொடங்கினர். அதன்பிறகு புர்வா தனியார் ஹோட்டலில் பணிக்கு சேர்ந்தார். அதேபோல் அதி, சலூன் ஒன்றில் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில் தான் புர்வாவிற்கு தனது காதலியான அதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அதி இன்னொருவருடன் கள்ளக்காதலில் இருப்பதாக புர்வா நினைத்தார்.
மேலும் தன்னை கழற்றிவிட்டுவிட்டு அதி தனது கள்ளக்காதலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவாரோ என்று நினைத்தார். இந்நிலையில் தான் இன்று காலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த புர்வா தனது காதலி அதியின் கழுத்தை கத்தியால் வெட்டினார். இதில் அதி துடிதுடித்து பலியானார். இதுபற்றிய புகாரின் பேரில் பெல்லந்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
பெங்களூரில் நடக்கும் கொடுமை..! திடீர் திடீரென வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டு ஓனர்கள்.. ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications