நாட்டையை உலுக்கிய அந்த சம்பவம்! கேஎஸ்ஆர்டிசி அரசு பஸ்களில் ‛பேனிக் பட்டனுடன் வரும் புதுவசதி! செம
பெங்களூர்: டெல்லியில் கடந்த 2012ல் ஓடும் பஸ்சில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கர்நாடகா அரசு தற்போது முக்கிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது இரவில் தனியார் பஸ்சில் பயணித்த இளம்பெண்ணை 6 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது. நிர்பயா என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்களில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த பிறகு நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்ய தொடங்கின. மேலும் மத்திய அரசு சார்பில் ‛நிர்பயா' என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரில் ஓடும் பிஎம்டிசி பஸ்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‛பேனிக் பட்டன்' எனும் அவரச உதவிக்கான பொத்தான் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பஸ்களில் பயணிக்கும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதால் இந்த பொத்தானை அழுத்துவதன் மூலம் உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தான் இந்த திட்டத்தை கர்நாடகா முழுவதும் விரிவுப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் ஓடும் அனைத்து கேஎஸ்ஆர்டிசி பஸ்களிலும் ‛பேனிக் பட்டன்' எனும் அவசர உதவிக்கான பொத்தான் அமைக்கப்பட இந்த பொத்தானை ஆபத்து சமயத்தில் அழுத்தும்போது நேரடியாக போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் செல்லும். அங்கிருந்து பஸ் செல்லும் இடத்தின் அருகே உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பஸ்களிலும் ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பஸ்களின் இருப்பிடம், பஸ்கள் இயங்குகள் வேகம் உள்ளிட்டவற்றை இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். அதோடு பயணிகளும் ஜிபிஎஸ் உதவியுடன் பஸ்களின் வருகை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். அரசு பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் திட்டத்திற்காக தனியே செயலி ஒன்றும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலியை மக்கள் பயன்படுத்துவதன் மூலம் பஸ்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியும்.
அதாவது இந்த திட்டத்தை கேஎஸ்ஆர்டிசி பஸ்களில் அறிமுகம் செய்ய மத்திய சாலை போக்குவரத்து கழகத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் திட்டத்தின் செலவில் 70 சதவீதம் பங்களிப்பதாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள 30 சதவீத தொகையை கர்நாடகா அரசு வழங்க வேண்டி இருக்கும். இந்த திட்டம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாக கர்நாடகா சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் எச்கே பட்டீல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் பெங்களூரில் ஓடும் பிஎம்டிசி பஸ்களில் பேனிக் பட்டன் வசதி உள்ளது. கேஎஸ்ஆர்டிசி பஸ்களில் பேனிக் பட்டன் அமலுக்கு வர உள்ளது. மாறாக கல்யாண் கர்நாடகா போக்குவரத்து கழகம் மற்றும் வடமேற்கு கர்நாடகா போக்குவரத்து கழகங்கள் இதற்கான விரிவான திட்ட அறிக்கையை இன்னும் தயார் செய்யவில்லை. இதனால் அந்த போக்குவரத்து கழக பஸ்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதில் பிரச்சனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications